உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
வெகு நாட்கள் கழித்து
உன்னோடு பேசும் பொழுதுகளில்..
மூச்சுவிடும் சிறிய இடைவெளியை
கூட நிரப்பும் படி...பேசுங்கள், பேசுங்கள் என்கிறாய்.
அப்பொழுதெல்லாம் நீ பேசும் கள்ளாகவே தோன்றுகிறாய்….
கள்ளிற்கு போதையுண்டு...சொல்லிற்குமா?