வாழ்த்து அட்டை நீட்டுகிறேன்,
வாங்க மறுக்கிறாய் நீ, எதற்காக மறுக்கிறாய்
என்று சிந்திக்காமல்,ஏன் வாழ்த்து வாங்கினேன்
என்று என் சிந்தை போன வழியை மறித்து
என் அகத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தாய்.
உன்னை தவிர எனக்கு ஏதடா பெரும் பரிசு?
என்றாய் செல்லக் கொஞ்சலோடு.
அன்று உன்னை எனதாக்கி,என்னை நானாக்கிய காதல்
தந்த வாழ்க்கை பரிசு பெரிதாக தோன்றியது.
காதல் தந்த வாழ்க்கையை காதலிடம்கூட கேட்காமல்
காதலோடு உனக்கு தருகிறேன் தட்டாமல் வாங்கிக்கொள்.
ஏனென்றால், விருப்பத்தோடு தருவதுதான்,
நம்மை காதலுக்கு நெருக்கமாய் வைத்திருக்குமாம்.