உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
வங்கிக்கு பணம் செலுத்த போவதாய்
சொல்கிறாய், வங்கிக்கு சென்று
உன் அழகால் கொள்ளையடித்துவிடாதே
என்கிறேன் நான்.
உடனே வெட்கக்கவிதை சிந்துகிறாய்
என் உள்ளம் கொள்ளை போனது.