ஊர் கண்படும் ரோஜா..நீ
கைப்படாத ரோஜா என்று
பீற்றிக் கொள்கிறாய்....
ரோஜாக்களின் இதழ்களை
பறித்தெடுப்பது போல்,
உன் இதழ்களை
கைகளால் பிரித்தெடுப்பது
அவ்வளவு எளிதல்ல......
அதனால்தான் என்னவோ
தனிமையில் உன்னை அணைத்த தருணத்தின்
கதகதப்பு, இன்றைய தனிமையில் உன் நினைவாய்,
கதகதப்பாக்குகிறது...
குறள் 1163 - காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து.
என் காதலியிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கையளிக்கப்பட்ட படத்தொகுப்பில் இடம்பெற்ற சில கிறுக்கல்கள்
எவ்வளவுதான் அழகை சேமித்து வைத்திருக்கிறாய்
எவ்வளவுதான் முத்தமிட்டு நான் அழகாக முயற்சித்தாலும்
உன் அழகுக்கு மட்டும் குறைவில்லையே
போனால் போகட்டும் என்று உன்னை இப்பொழுது
அணுஅணுவாய் ரசிக்கிறேன். சிறிது நாட்கள் செல்லட்டும்
எங்கு என் பயணத்தை துவக்கினாலும்
நீ என்னை கண்டு கூச்சப்படுகிறாய்
உன் உதடு சுழித்து நீ சிந்தும்
சிரிப்பை காணும் பொழுதுதான்
சில நேரங்களில் என்னையே பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கிறாய்...
குழப்பமாகிவிடுகிறது....
உதடுகளை மறைக்காதே, இன்றைக்கு இப்பொழுது
அதிகமாய் வேண்டாம், ஒன்றிரண்டு முத்தம் மட்டும் போதும்....
மீதத்தை தவணை முறையில் நாளொன்று, பொழுதிரண்டு
உனக்கு நான்கு இதழ்கள்....
ஆம், காது மடல்களையும் சேர்த்துதான்.........
இதழ்களைவிட அவைதான் முத்தங்களை
எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றனஊர் கண்படும் ரோஜா..நீ
கைப்படாத ரோஜா என்று
பீற்றிக் கொள்கிறாய்....
ரோஜாக்களின் இதழ்களை
பறித்தெடுப்பது போல்,
உன் இதழ்களை
கைகளால் பிரித்தெடுப்பது
அவ்வளவு எளிதல்ல......
அதனால்தான் என்னவோ
தனிமையில் உன்னை அணைத்த தருணத்தின்
கதகதப்பு, இன்றைய தனிமையில் உன் நினைவாய்,
கதகதப்பாக்குகிறது...
குறள் 1163 - காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து.
களைத்து உறங்கும்,
குழந்தைகளை அருகில்
பார்க்கும் வேளைகளில்,
எனை அணைத்து உறங்கும்
சந்தையின் நெரிசலில்,
என்னை தேடும் உன் விழிகளை
தேடி, பார்த்தபின்பு, வாங்க வந்த
பொருட்களை மட்டுமில்லாமல்,
என்னையும் மறந்து எத்தனை முறை வீடு
திரும்பியிருக்கிறேன் தெரியுமா!
உன் தோளில் கை வைக்கும் பொழுது
சில நேரங்களில் கைநீக்கி விடுகிறாய்,
உன்னை தொட வரும் தென்றலிடம்
என்னவனை தவிர யாருக்கும் தொட
உரிமையில்லை, நீ என்னை நெருங்கும்
முன் என்னவனின் கைகள் காற்று புகா
அளவுக்கு என்னை அணைத்து கொள்வான் பார்
என்று சொல்வது போல் இருந்தது.
வீட்டை குப்பை மேடாக
ஆக்கி விளையாடும் குழந்தைகளை,
பார்க்கும் பொழுதெல்லாம்,
உன் நினைவு வரும்,
குழந்தை வேண்டி,
உனக்கான கவிதைகளை
எழுதிய தாள்களில்.....
கண்டு வெட்கப்பட அருகில் நீயில்லை
என்பதனால்....
சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....
மூடநம்பிக்கைகளில் எனக்கு
நம்பிக்கையில்லை.....
ஆனாலும், நீ பிரிந்த தருணம் முதல்
ஒயாத தும்மல்.....எனக்குஏதோ ஒரு திரைப்பாடலில்
தோள் சாய உரிமைக்கோரும்
பெண்ணை குறிப்பிட்டு என் தோள்
நீ சாய்ந்த அந்த தருணம் இன்னும்
பசுமை பரப்புகிறது என் உள்ளத்தில்....
தோள்களில் தென்றல், தூசி என அனைத்தும்
அமர்ந்து செல்கிறது...........
உன் கைகளையும் காணவில்லை...
கன்னங்களையும் காணவில்லை தோழி
என் காதலியிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கையளிக்கப்பட்ட படத்தொகுப்பில் இடம்பெற்ற சில கிறுக்கல்கள்
எவ்வளவுதான் அழகை சேமித்து வைத்திருக்கிறாய்
எவ்வளவுதான் முத்தமிட்டு நான் அழகாக முயற்சித்தாலும்
உன் அழகுக்கு மட்டும் குறைவில்லையே
போனால் போகட்டும் என்று உன்னை இப்பொழுது
அணுஅணுவாய் ரசிக்கிறேன். சிறிது நாட்கள் செல்லட்டும்
எங்கு என் பயணத்தை துவக்கினாலும்
நீ என்னை கண்டு கூச்சப்படுகிறாய்
உன் உதடு சுழித்து நீ சிந்தும்
சிரிப்பை காணும் பொழுதுதான்
சில நேரங்களில் என்னையே பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கிறாய்...
குழப்பமாகிவிடுகிறது....
உதடுகளை மறைக்காதே, இன்றைக்கு இப்பொழுது
அதிகமாய் வேண்டாம், ஒன்றிரண்டு முத்தம் மட்டும் போதும்....
மீதத்தை தவணை முறையில் நாளொன்று, பொழுதிரண்டு
உனக்கு நான்கு இதழ்கள்....
ஆம், காது மடல்களையும் சேர்த்துதான்.........
இதழ்களைவிட அவைதான் முத்தங்களை
எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றன