பாட்டுக்கு பொய் அழகு என்றாய்,
உனக்காக நான் செய்த பாவில்
மாவிலை தோரணம் போல் செய்த
சொல் அழகில்லையா? என்று
திமிர் கொண்டு கேட்டேன்.
சிரித்து கொண்டே, பா எழுதிய தாளை
கூட பார்க்காமல், உன் பாடல் மிக அழகு
என்று, திமிர் அடங்கி உணர்ந்தேன்,
பொய் அழகுதான் காதலில் என்று.