பொய் அழகுதான்!!!!


பாட்டுக்கு பொய் அழகு என்றாய்,

உனக்காக நான் செய்த பாவில்

மாவிலை தோரணம் போல் செய்த

சொல் அழகில்லையா? என்று

திமிர் கொண்டு கேட்டேன்.

சிரித்து கொண்டே, பா எழுதிய தாளை

கூட பார்க்காமல், உன் பாடல் மிக அழகு

என்று, திமிர் அடங்கி உணர்ந்தேன்,

பொய் அழகுதான் காதலில் என்று.







பள்ளிக்கு செல்லும் நீ


பள்ளிக்கு செல்லும் நீ, உன் தாயிடம்

உரக்க சொல்லி போகிறாய்,

நானும் அறியட்டும் என்று!?

போகும் பொழுது

உன் நிழலெடுத்து,

நினைவை விட்டு செல்கிறாய்.

உறக்கம் கெடுத்து,

கனவை கொடுத்து செல்கிறாய்.

ஒன்று கனவை கொடு, அல்லது உறக்கம் கொடு

இரண்டும் சேர்ந்தே செய்தால் யார் விழியில்

சென்று நீ தந்த கனவை காண்பேன் நீயே சொல்

பொய் அழகுதான்!!!!


பாட்டுக்கு பொய் அழகு என்றாய்,

உனக்காக நான் செய்த பாவில்

மாவிலை தோரணம் போல் செய்த

சொல் அழகில்லையா? என்று

திமிர் கொண்டு கேட்டேன்.

சிரித்து கொண்டே, பா எழுதிய தாளை

கூட பார்க்காமல், உன் பாடல் மிக அழகு

என்று, திமிர் அடங்கி உணர்ந்தேன்,

பொய் அழகுதான் காதலில் என்று.







பள்ளிக்கு செல்லும் நீ


பள்ளிக்கு செல்லும் நீ, உன் தாயிடம்

உரக்க சொல்லி போகிறாய்,

நானும் அறியட்டும் என்று!?

போகும் பொழுது

உன் நிழலெடுத்து,

நினைவை விட்டு செல்கிறாய்.

உறக்கம் கெடுத்து,

கனவை கொடுத்து செல்கிறாய்.

ஒன்று கனவை கொடு, அல்லது உறக்கம் கொடு

இரண்டும் சேர்ந்தே செய்தால் யார் விழியில்

சென்று நீ தந்த கனவை காண்பேன் நீயே சொல்