எனக்கு காய்ச்சல், நான் பாவம்?
என்று நீ கொஞ்சி சொல்லும்
சொல்லில்தான் அகம்பாவம் பிடித்து
உன்னைவிட்டு போக மறுக்கிறது
காய்ச்சல்.
எனக்கு காய்ச்சல், நான் பாவம்?
என்று நீ கொஞ்சி சொல்லும்
சொல்லில்தான் அகம்பாவம் பிடித்து
உன்னைவிட்டு போக மறுக்கிறது
காய்ச்சல்.
நீ உணவுண்ணும் வழி
இதழ்களா? விழிகளா?
===================
சாப்டீங்களா? என்று கேட்டுக்கொண்டே
உன் கெண்டை விழிகளால்
எனை உண்டு கொண்டே கேட்க
உன்னால் மட்டும்தான் முடியும்
கோழி முட்டையிட
குஞ்சு அடைகாக்கும் விந்தை..
காதலில் மட்டுமே உண்டு...
நீ வீசியெறிந்த முட்டை கண்ணை
நான்தானே இன்றுவரை அடைகாக்கிறேன்..