விழித்திருந்த நேரமாக இருந்தாலும் சரி,
விழி திறக்கும் நேரமானாலும் சரி,
என் கனவுகள் விழித்தே இருக்கின்றன.
விழித்த நேரத்தில் உன் நிழலையும்,
அவை கழித்த நேரத்தில் உன் நினைவையும்,
விழித்து காவல் காப்பதுதான்
ஒரு மாறுபாடு.
என் உணர்வுகளை கோப்பையில்
ஊற்றி நீ பருக தர வேண்டும்
என்ற தீரா தாகம்தான் எனக்கு,
பாவின் சொற்களிடம்
உன் உள்ள முகவரியை
நீ உள்ள முகவரியை தெரிவித்து,
அனுப்பி வைக்க வேண்டும்
என்ற விருப்பமும்தான்,
அது இயலாமல்தான் இணையத்தின்
கோப்புகளாய் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இயலாமையை நினைத்து வருத்தபடவில்லை,
ஏனென்றால் உன் இயல்பான வெட்கம்தானே,
என் இயலாமைக்கு காரணம்.
விழித்திருந்த நேரமாக இருந்தாலும் சரி,
விழி திறக்கும் நேரமானாலும் சரி,
என் கனவுகள் விழித்தே இருக்கின்றன.
விழித்த நேரத்தில் உன் நிழலையும்,
அவை கழித்த நேரத்தில் உன் நினைவையும்,
விழித்து காவல் காப்பதுதான்
ஒரு மாறுபாடு.
என் உணர்வுகளை கோப்பையில்
ஊற்றி நீ பருக தர வேண்டும்
என்ற தீரா தாகம்தான் எனக்கு,
பாவின் சொற்களிடம்
உன் உள்ள முகவரியை
நீ உள்ள முகவரியை தெரிவித்து,
அனுப்பி வைக்க வேண்டும்
என்ற விருப்பமும்தான்,
அது இயலாமல்தான் இணையத்தின்
கோப்புகளாய் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இயலாமையை நினைத்து வருத்தபடவில்லை,
ஏனென்றால் உன் இயல்பான வெட்கம்தானே,
என் இயலாமைக்கு காரணம்.