சூட்டில் மை காய்ந்துவிடாதா?



பேனா முனையை....
இதழில் வைத்து சிந்தித்தால்
பேனாவுக்கு எப்படிங்க எழுத வரும்....
சூட்டில் மை காய்ந்துவிடாதா?

பேனாவை என்னிடம் தந்துவிட்டு
என்னைத்தவிர மற்றதை பார்
கவிதைகள் தானாய் வரும்..

இல்லையென்றால் என்னாலும்
கவிதைஎழுத முடியாது...
இதழ் கிறுக்கலைத்தான்
படிக்கத்தான் முடியும்...

வெற்றுத்தாளின் பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது



என் பெயரை மட்டும் எழுதி
நீ நீட்டிய வெற்றுத்தாளின்
பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது
நான் தேடிக்கொண்டிருக்கும்
ஓராயிரம் கவிதைகள்

நீயே வரைந்து கொள்ளும் நிழல்



எல்லோருக்கு சூரியன் வரையும் நிழலை
உனக்கு மட்டும் நீயே வரைந்து கொள்வாயோ?



கடலில் குளிக்க செல்லும் முன்
உன் நிழலை கரையிலேயே விட்டுச்செல்
தாகத்தில் உன் நிழலை
கடல் குடித்து விடப்போகிறது

என் வீட்டிற்கு வழி தெரியவில்லை



என் வீட்டிற்கு வழி தெரியவில்லை
உன் காலடி தடமெங்கே?
என் கண்ணாடிக்குள் உருவம் தெரியவில்லை
உன் நிழலெங்கே?
என் காதுகளுக்கு குரல் கேட்கவில்லை
உன் அழைப்புகளெங்கே?

எனக்கும் கேட்காத ரகசியம்


கைப்பேசியில் யாரும் கேட்காது
ரகசியம் பேசும் நீ,
எனக்கும் கேட்காத அளவுக்கா
ரகசியம் பேசுவாய்....

நல்ல வேளையாய் உன் அருகில்
இருந்த வேளைகளில்,
மௌன மொழி கற்று தந்தாய்....
இல்லையென்றால், என் பாடு
திண்டாட்டம்தானே?

என் க‌விதை என்னும் ந‌ச்சுத்தேர்வு


என் வீட்டு மொட்டை மாடியில்
அம‌ர்ந்து எழுதிய‌ கவிதை தாள்க‌ளை
பொறுக்கி கொண்டு...
உல‌க‌ தோட்ட‌த்திலிருந்து...
உன் ர‌க‌சிய‌ தோட்ட‌த்திற்கு அழைத்து வ‌ந்தாய்...

அப்பாடா!! என் க‌விதை என்னும்
ந‌ச்சுத்தேர்வில் உலக‌ம் விடுத‌லை அடைந்த‌து...

சூட்டில் மை காய்ந்துவிடாதா?



பேனா முனையை....
இதழில் வைத்து சிந்தித்தால்
பேனாவுக்கு எப்படிங்க எழுத வரும்....
சூட்டில் மை காய்ந்துவிடாதா?

பேனாவை என்னிடம் தந்துவிட்டு
என்னைத்தவிர மற்றதை பார்
கவிதைகள் தானாய் வரும்..

இல்லையென்றால் என்னாலும்
கவிதைஎழுத முடியாது...
இதழ் கிறுக்கலைத்தான்
படிக்கத்தான் முடியும்...

வெற்றுத்தாளின் பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது



என் பெயரை மட்டும் எழுதி
நீ நீட்டிய வெற்றுத்தாளின்
பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது
நான் தேடிக்கொண்டிருக்கும்
ஓராயிரம் கவிதைகள்

நீயே வரைந்து கொள்ளும் நிழல்



எல்லோருக்கு சூரியன் வரையும் நிழலை
உனக்கு மட்டும் நீயே வரைந்து கொள்வாயோ?



கடலில் குளிக்க செல்லும் முன்
உன் நிழலை கரையிலேயே விட்டுச்செல்
தாகத்தில் உன் நிழலை
கடல் குடித்து விடப்போகிறது

என் வீட்டிற்கு வழி தெரியவில்லை



என் வீட்டிற்கு வழி தெரியவில்லை
உன் காலடி தடமெங்கே?
என் கண்ணாடிக்குள் உருவம் தெரியவில்லை
உன் நிழலெங்கே?
என் காதுகளுக்கு குரல் கேட்கவில்லை
உன் அழைப்புகளெங்கே?

எனக்கும் கேட்காத ரகசியம்


கைப்பேசியில் யாரும் கேட்காது
ரகசியம் பேசும் நீ,
எனக்கும் கேட்காத அளவுக்கா
ரகசியம் பேசுவாய்....

நல்ல வேளையாய் உன் அருகில்
இருந்த வேளைகளில்,
மௌன மொழி கற்று தந்தாய்....
இல்லையென்றால், என் பாடு
திண்டாட்டம்தானே?

என் க‌விதை என்னும் ந‌ச்சுத்தேர்வு


என் வீட்டு மொட்டை மாடியில்
அம‌ர்ந்து எழுதிய‌ கவிதை தாள்க‌ளை
பொறுக்கி கொண்டு...
உல‌க‌ தோட்ட‌த்திலிருந்து...
உன் ர‌க‌சிய‌ தோட்ட‌த்திற்கு அழைத்து வ‌ந்தாய்...

அப்பாடா!! என் க‌விதை என்னும்
ந‌ச்சுத்தேர்வில் உலக‌ம் விடுத‌லை அடைந்த‌து...