“ பரிசாக நீ போதும் எனக்கு”




பிரிவு என்னும் சொல்லுள்ள கவிதையை

உனக்கு வாசிக்களித்தேன், அன்று பிரிவு

என்னும் சொல்லடித்து அக்கவிதை தாளை

திருப்பியளித்தாய்.


அதே நீ, பிரிவளித்து சென்றிருக்கிறாய்,

மூன்று நாட்கள்தான் என்றாலும்,

உன்னோடு இருக்கும் போது தாராளமாய்

செலவழிந்த நொடிகள், இன்று கஞ்சத்தனமாய்

கழியவே மாட்டேன் என்கின்றன.

சிறிய இடைவேளைதான் என்றாலும்

பிரிவுகழிந்து வரும் போது இறுக்கமாய்

என்னை, அன்னை போல் அணைத்து கொள்வாய்......

எனும்போது, காத்திருப்பதில் தவறில்லை என்றுதான்

எண்ணத் தோன்றுகிறது.


முத்தங்கள், உணர்வூட்டங்கள், கனவு-இரவுகள்

என மட்டும் பரிசளித்த நீ, இன்று ஏக்கங்கள் எனக்களித்து

சென்றிருக்கிறாய், நீ அளிக்கும் எதுவும் பரிசுதான் என்று

இதை இப்போதைக்கு ஏற்றுக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட பரிசுகளை தருவதானால், பரிசுகளை

நிறுத்திக் கொள்,

பரிசாக நீ போதும் எனக்கு

புதுக்கவிதையாய்!


என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து  நான் சொன்னேன்
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றனஎன்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!


சே தன் மனைவிக்கு எழுதிய கடிதம்





அன்பிற்குரியவளே!

உன்னை பிரிந்து போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் உயரிய செயலுக்காக தியாகங்கள் செய்ய விரும்பிகிற இந்த மனிதனை நீ அறிவாய்.

  உள்ள-திடத்தை இழந்து விடாதே. ஒரு வேளை, நான் இறந்து போனால்,என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டு செல்லும் பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களை கண்டு நம்மை போலவே அவர்களும் சினம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  காலமும் தூரமும் நம்மை பிரித்தாலும்,எப்போதும் நான்  உங்களுடன்தான் இருப்பேன்,என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டு பிரிகிறோம் என்றுஎண்ணும்போது வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களை சுரண்டும் எதிரிகளுடன்தான் போரிட சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.

 

உன் உடல் நல்த்தையும் கவனமாக பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள்.என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாக பெற்றதையும் எண்ணி பெருமைப்படுகிறேன்.

 இந்த போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதி தருணத்தில் உன்னை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

 

மருதன் எழுதிய

சேகுவேரா-வேண்டும் விடுதலை நூலிலிருந்து

பக்கம்:174

ஏன்?எதற்கு?எப்படி?


உன்னை ஏன் காதலிக்க கூடாது
என்று உள்ளம் கேட்டது,
இன்று வரை ஏன்
உன்னை காதலிக்க வேண்டும்? என்று
என் உள்ளத்திடம் கேட்டதே இல்லை
ஏனென்றால் நீ என் உள்ளம் காட்டிய
பெண்ணாக இருந்தாலும், இனி என்
உள்ளம் மறுத்தாலும் கேட்பதாயில்லைநான்,
எல்லாம் ஒரு சுயநலம்தான்
ஏனென்றால்,எல்லோருக்கும் பெண்ணை காதலிக்கும்
வாய்ப்பு கிடைக்கும், எனக்கு மட்டும் தேவதையை
காதலிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

எதற்குதான் உன்னை காதலித்து
தொலைத்தேனோ?என்னை தொலைக்கத்தான்
உன்னை காதலிக்க துணிந்தேனோ!!!!!

இவ்வளவு ஏன்?
எப்படி  காதலிக்க வேண்டும் என்று
கூட ஆலோசனை கேட்டதில்லை?
உள்ளத்திடம், உன்னை உள்ளம்
காட்டியதுதான் தாமதம்,
காதலோடு இலவச  இணைப்பாக
கவிதைகளையும் அல்லவா எடுத்து
வந்திருக்கிறாய்,எப்படி எப்படிஎன்று கேட்க முடியும்
                                                                                         
என் எழுத்துகள் எதுவுமே கவிதைகள் ஆகிப்போகின்றது,
உன் கண்கள் பார்த்து, கன்னம் சிவக்க நீ சிரிக்கும்
மௌனச்சிரிப்பில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

உனக்காக கவிதை

தேடித்திரியும் என் உள்ளம்

உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது,

உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே

உன்னை பற்றி மட்டுமே எழுதி முடிக்கிறது

பேனா மை!

அப்படி என்ன எழுதிவிடுவாய்?

அவளுக்கு தெரியாமல், அவளைப் பற்றி

என்று எழுதுகோலிடம் கேட்டால்,

அப்படி என்ன  காதலை

அவளிடம் சொல்லிவிடுவாய்?

அவளுக்கு அறியாத காதலை

நான் நாளும் காதலை தெரிவிக்கிறேனாம்

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?



நான் உன்னில் என்னை தேடும் தருணம்

என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு

இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய்

இதழ்களும் சலிக்காமல் எப்படித்தான் ஒத்துபோகிறதோ?

சலிப்புகள் சிலநேரங்களில் உனக்கு எட்டிப்பார்த்தாலும்

கூச்சம் என்று கூச்சமே இல்லாமல் பொய் வேறு சொல்லிவிடுகிறாய்

நான் சினம் கொள்ளக்கூடாதென்று.

உன் அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

சிறு குழந்தையை கொஞ்சினாலும்,

எனக்கு மட்டும்தான் அது என்று உரிமை

கொண்டாடுகிறாய் சரி, ஆனால், சிலநேரம்

யாரையும் திட்டினாலும்,என்னை திட்டுவதனாலும்

என்னை மட்டும் திட்டுஎன்கிறாயே உன் அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

முன்பெல்லாம் எனக்கு அப்படி தோன்றியதில்லை

ஆனால், நீ இப்பொழுது யாரிடம் பேசினாலும்

எனக்கு சினம் வருகிறது என்கிறாய்,

நான் யாரிடம் பேசினாலும் உன்னை பற்றிதான்

வெகுவாக பேசுகிறேன் என்பதை புரியாமல்;

அடம்பிடிக்கும் உன் ஆழமான அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

என் உடல் சூடெல்லாம், உன் உடல் தழுவியதால்

நழுவின என்று நான் நழுவிச்செல்லும் தருணம்

உன் உடல் காய்ச்சலில் கொதிப்பதாகக்கூறி

உன் அருகில் மீண்டும் என்னுடல் பற்றிக்கொண்டது,

தணிப்பவளும், வெட்பம் கூட்டுபவளும் நீயாயிருக்க

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

புரட்சிக்கருத்துகள் என்னை மூளைச்சுற்றி

வந்தாலும், பூக்களாய் என் சிந்தையெங்கும்

குடியிருக்கும் நீ,எனக்காக நான் ஏற்றுக்கொண்ட

கருத்துக்களை பிடிக்காவிட்டாலும் வலிந்து படிக்கும்

உன்  அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

நம் இதழ்களை தடுக்க முடிவதில்லை!




என் காதினிக்க பேசுகிறாய்,

நான் காதலிக்க பேசுகிறாய்,

காதலித்து பேசுகிறாய்,

எவ்வளவுதான் பேசினாலும்

புதிதாய் பேசுவதுபோல் பேசுகிறாய்,

நீ பேசும் சொற்கள் வெளிப்படும் போது

உன் இதழ்கள் என் இதழ்களை அழைப்பது

போலவே இருப்பதனால்தானோ என்னவோ

நம் இதழ்கள் சேறுவதை என்னால்

தடுக்கவே முடிவதில்லை.

எதிர்பார்த்து நிற்கும்!!!!




கனவுகள் ஓயாமல்
என் அகக்கரையில் இடித்தாலும்,
அலை எதிர்பார்த்து நிற்கும்
கரை போல அலை பாய்கிறது என் விழி  


ஏதாவது தொடர்பு கொண்டு சொல்!!!!


என் சொற்கள் நோய்வாய்பட்டுக் கிடக்கின்றன,
உன் சொல் கேளாமல்,
உனக்காக கவிதை எழுத அமர்ந்தால் சொற்கள்
என் சொல் கேளாமல், உன் சொல் கேட்க விருப்பபட்டு
நோன்பு கடைபிடிக்கின்றன, சொல் ஊமையாகி போனேன்,
ஏதாவது தொடர்பு கொண்டு சொல்,எனக்காக இல்லாவிட்டாலும்
சொற்களுக்காக.

உன் காலடி தேடி!!!!!!!!

நீ ஊருக்கு சென்றதை அறியாமல்,
உன் காலடி தேடி ஊர்கின்றன,
என் கண்கள்.

உன் கூச்சம் !!!!!!!!!!!!!!!!!

தொடுதல் என்பது புலனால்

மட்டுமே வாய்ப்பது என்று

நினைத்திருந்தேன்,

உன் நினைவால் கூட வாய்க்கும்

என்று இன்றுணர்ந்தேன்,

என் தொடுதல் உன்னை

கூச்சப்படுத்தியதாய் கூறி,

உன் கூச்சத்தின் மிச்சத்தை என்னிடம்

விட்டு சென்றாயோ, என்னவோ?

உன் கூச்சம் நேற்று என்னை

தீண்டாமல் இன்று தீண்டுகிறது,

காற்றின் தொடுதல் கூட

என்னை கூச்சப்படுத்தும்படியாக!!!! (நல்ல பழி வாங்கல்தான் போ!)

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து!


உன்னை முத்தமிட்டபின்பு

என் இதழ்கள் உணவை தொட

மறுக்கின்றன,

அதோடு நில்லாமல் , என் நிழலோ!

உன் நிழல் பட்ட இடம் கண்டால்

அவ்விடம் விட்டு நகரவே மறுக்கிறது,

என்னோடு வரவும் மறுக்கிறது,

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து

அங்கேயே தங்கிவிடுகிறது போலும்! 

மொத்தமாக கிள்ளி போகிறாய்!


கிள்ள வேண்டும் போலவே

தோன்றுகிறது என்றாய்,

எனக்கும்தான் உன்னை அள்ள

தோன்றுகிறது!

என்று எனக்கு நானே 

உள்ளத்தில் கூறிக்கொண்டேன்.

ஆனால், நீ அள்ளி முடியும்
கூந்தலிலேயே என் உள்ளம் மட்டுமல்லாமல்,

என்னையும் மொத்தமாக கிள்ளி போகிறாய். 

காதலாய் வடிந்து ஒடும்!!!!!


என் நண்பன் ஒரு குவளை இதை பற்றி ஒரு கவிதை வடி பார்ப்போம் என்றான்

அவனிடம் நான் அளித்த்து இதோ

 

ஒரு குவளை கொடுத்து

கவிதை வடிக்க சொன்னாய்,

குவளை ஒன்றும் என்னவளின்

நினைவுதுளிகள் தங்கி நிற்கும்

உள்ளக்கிளைகளும் அல்ல,

அதன் இலைகளும் அல்ல,

ஒரே ஒரு முறை குவளையின்

ஏதாவது ஒருபுறத்தில் என்னவளின்

பெயரை எழுதிப் பார்,

கவிதை நான் வடிக்க தேவையில்லை,

கவிதை காதலாய் வடிந்து ஒடும்

நீ காட்டிய குவளையின் விளிம்பில்......

நிழல் கண்ணாடியின் கண்டனம்


உன் வீட்டு நிலை கண்ணாடி

எனக்களித்த கண்டன ஓலை,

 

உன்னவளிடம் சொல்லி வை,

தினமும், நிழல் படும்படியாய் நின்று விட்டு

உண்மையை மட்டும் தன்னோடு கொண்டு

சென்று விடுகிறார்ள்!

இது, இனிப்பு காண்பித்து, குழந்தையை

ஏமாற்றுவது போல் உள்ளது,

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

நான் கூறினேன்,

நீ ஒன்றும் அவளை கடிந்து கொள்ளாதே,

அவள் தன் நிழல் உன்னிடம் விடுத்து,

உண்மை தனதாய் கொண்டு வருவதே,

அந்த உண்மை எனதாய் இருப்பதால்தான்

நான் அவள் நிழலாய் பின் தொடர்வதால்தான்.

என்று கூறி ஏதோ அமைதி படுத்தினேன்

உன் வீட்டு நிலைக் கண்ணாடியை.

கொள்ளை அழகுதான் , எனக்கு!

என் எழுத்து அழகாக இருக்காது,

நீ பார்த்தால் கிண்டலடிப்பாய் என்று

அழகாக சலித்து கொண்டாய்,

(சலித்து கொள்வதிலும் உன் அழகு

எப்படிதான் தெறித்து விழுகிறதோ!!!!!)

எழுத கற்றுக் கொள்ளும்

குழந்தையின் கிறுக்கல்கள் என்றுமே

அழகுதானே, தாய்க்கு !!!!!

அதுபோல, உன் எழுத்தைவிடு

நீ வைக்கும் புள்ளிகூட,

கோலமிட்ட்தை போல் என்றும்

கொள்ளை அழகுதான் , எனக்கு!

ஏமாறுவதானால் இவளிடம் தான்

புவி சுழலும்

பகல் அகலும்,என் நிழலும்

என்னை விட்டு நகரும்

நான் தனிமை உணரும் பொழுதில்

உன் நினைவு என் நிழலாய்

என்னை அருகும்,

என் தொண்டை குழி உலரும்.

உன் பெயரை உளரும்,

தனிமையில் இருக்கும்

என்னை உன் நிழல் நெருங்கும

இதழில் புன்னகை பூ பூக்கும்,

இதழ் நெருங்கி பூ பறிக்கத்தான் வருகிறாய்

என்று காத்து என் இதழ் தாங்கி நிற்பேன்.

ஆனால், நீயோ புன்னகைக்கு புன்னகை போதும்

என்று ஏமாற்றி செல்வாய்.

மீண்டும் என் இதழ்கள் புன்னகை பூக்கும்,

ஏமாறுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி

என கிண்டல் செய்யும் என் இதழ்கள்,

நான் என் இதழ்களிடம் சொல்லடக்க சொன்னேன்,

எங்கே உன் இதழ்களுக்கு கேட்டு விடுமோ?

நீங்கள் இவளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்,

ஏமாறுவதானால் இவளிடம் தான்

ஏமாற வேண்டும்....என்று

காதல் ஜனநாயகமானால்...- லோப முத்ரா




தலித்துகள் கல்வி கற்காதவரை
விழிக்காதவரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்த ஊரில்
"அமைதி" இருந்தது!!
பெண்கள் கல்விகற்காதவரை
விழிக்காத வரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்தக் குடும்பத்தில்
"நிம்மதி" இருந்தது!!
அந்த ‘அமைதி' ஒழிக!
அந்த ‘நிம்மதி' ஒழிக!
ஒருவர் "பொறை" இருவர் நட்பு
சரிதான்;
எப்போதும் "பொறை" யாருக்கு?

சமூகத்தின் ஒரு பகுதியை
முடமாக்கிவிட்டு
சமத்துவம் பேசுவது அர்த்தமற்றது
குடும்பத்தின் செம்பாதியை
ஊமையாக்கி விட்டு
ஜனநாயகம் என்பது
சாத்திய மற்றது.
‘குடும்ப தினம்' எதற்கு?
போற்றுவதற்கா
காப்பதற்கா?

போற்றுவதெனில் எதைப்
போற்ற விளைகிறாய்?
காப்பதெனில் எதைக்
காக்க விளைகிறாய்?
கணவன், குழந்தை
குடும்ப கவுரவம் இவற்றுக்காய்
உணர்ச்சிகளைக் கொன்று
தன்னைச் சிதைத்து
பிணமாய் வாழும்
பெண்மையைப் போற்றவோ!!

தன்னை இழந்து
தன்நாமம் கெட்டு
சம்சார சாஹரத்தில்
தீர்க்க சுமங்கலியாய்
என்றும் சுமைதாங்கியாய்
பெண்கள்
இருத்தலைக் காக்கவோ!!
சரி! சரி!

குடும்பம் என்பது யாது?
விதியே என வாய்த்ததுவோ!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டதால்
புளியமரம் ஏறுவதோ?
குடும்பம் என்பது யாது?
நாகரீக சமூகத்தின்
அடிப்படை அலகு.
இந்த அடித்தளம் தகர்ந்தால்
சகலமும் நொறுங்கும்
விலங்கினும் கீழாய்
வாழ்க்கை இழியும்.

குடும்பம் என்பது யாது?
முர்டோக் என்றோரு
மானிடவியலார் கூறுகிறார்:
"கூடி ஒரு இல்லத்தில் வாழ்ந்து
பொருளாதாரத்தில் ஒத்துழைத்து
வம்சவிருத்தியில் ஈடுபடும் குழு."
மேலும் விரிக்கிறார்:
"சமூகம் அங்கீகரித்த
சட்டம் வரையறுத்த
ஒத்த வயதுடைய
ஒருவனும் ஒருத்தியும்
பாலியல் உறவு கொண்டு
பிள்ளைகள் பெற்று
(அ) தத்தெடுத்து
வாழ்வதன்னியில்
உடலாலும்
உணர்வாலும்
பொருளாதாரத்தாலும்
ஒன்றி வாழ்வது."

குடும்பம் என்பது
தனிநபர்த் தேவையின்
விளைவு மட்டுமா?
அல்ல அல்ல.
சங்கிலிக் கண்ணிகள்
அறுந்திடாமல்
கூடிவாழும் சமூகப் பண்பாட்டின்
கூறுகளை
தலைமுறை தலைமுறையாக
கைமாற்றி கைமாற்றி
வளப்படுத்தி பலப்படுத்திட
கடமையும் பொறுப்பும் கொண்ட
அடித்தளமாகும்.

‘இன்பம் துய்க்கவும்'
‘இன்னல் எதிர்கொள்ளவும்'
கூடிவாழ வேர்கொள்வதுவே
குடும்பம் என்பதை
வரலாறு சொல்லும்.
சொத்தின் மீது
ஆசை வந்ததும்
சொந்தம் என்பதில்
மேல் கீழ் வந்தது
ஆணின் தலைமை
திணிக்கப்பட்டது.
ஆஸ்திக்கு ஆணென
அர்த்தம் புகுத்தப்பட்டது

பெண்ணின் நிலைமை
அடிமையானது
சிரிப்புக்குக் கூட
வரம்புகள் போடப்பட்டது
சமூக வேரில்
வெந்நீர் ஊற்றப்பட்டது
‘குடும்பம்' இங்கே
சுமையாய்ப் போனது.
‘கூட்டுக் குடும்பமோ'
‘தனிக் குடும்பமோ'
அததற்கு ஆயிரம் பிரச்சனைகள்!
"பெண்ணே சுமை தாங்கி"
இரண்டுக்கும் பொதுவானது.

விவசாய வாழ்க்கையில்
உழைப்பில் இருந்த பங்கையும்
பின் இழக்க நேர்ந்தது
போராட்டங்கள் ஊடாகவும்
பொருளாதாரத் தேடலாகவும்
உழைக்கும் வாய்ப்பு
பெண்களுக்கு பெறப்பட்டது
இன்று, வீடு வேலைத்தளம்
இரண்டு ‘ஷிப்டு'
பெண்ணின் இடுப்பொடிகிறது
கூட்டை உடைத்தெறி என
கேட்பதில் வியப்பில்லை

கட்டுத் தளைகளை வெட்டியெறிய
முட்டி மோதுவதில் தவறே
இல்லை
கூடு சிதைந்தால் நாடு சிதையும்
கூடு தகர்ந்தால் அராஜகம் ஓங்கும்
கூட்டைக் காப்பது எப்படி?
இனி அது
பெண்ணின் பொறுப்பு அல்ல
ஆணின் பொறுப்பு
‘வாழ்க்கைத் துணை' என
ஏனையோரை விஞ்சி
ஒரடி முன்வைத்த
வள்ளுவன்
கணக்கும் மாறியது
வாழ்க்கை ‘துணை' அல்ல
வாழ்க்கை ‘இணை' என்போம்.

சுகம், துக்கம்,
சுமை, சுதந்திரம்
எல்லாமே இருவருக்கும்
அடுக்களை முதல்
குழந்தை வளர்ப்பு வரை
எல்லாவற்றிலும்
‘புரிதலும், பகிர்தலும்'
குடும்ப ஜனநாயகத்தின்
அச்சாணி ஆகும்.
இனி தொடங்குவதையாவது
ஜனநாயகத்தில்
கால்பதித்து தொடங்கலாமே!

ஜனநாயகம்
அரசியலுக்கு மட்டுமல்ல
வாழ்வுக்கும் தான்.
காதலில் அதைத் துவங்கு
காதல் ஜனநாயகமானால்
குடும்ப ஜனநாயகம்
தானே பூக்கும்...
காதல் ஜனநாயகம்!
அதெப்படி?

ஈழப்பெண் கவிஞர்
நளாயினி தாமரைச் செல்வன்
கூறுகிறார்:
"காதல் என்றால்
என்னவென்று தெரியுமா?
உனக்கு
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்."
நீங்கள் தயாரா? 

நன்றி

லோப முத்ரா
http://www.keetru.com/literature/poems/lopamuthra.php

ஒரு மாறுபாடு



விழித்திருந்த நேரமாக இருந்தாலும் சரி,

விழி திறக்கும் நேரமானாலும் சரி,

என் கனவுகள் விழித்தே இருக்கின்றன.

விழித்த நேரத்தில் உன் நிழலையும்,

அவை கழித்த நேரத்தில் உன் நினைவையும்,

விழித்து காவல் காப்பதுதான்

ஒரு மாறுபாடு.

உன் இயல்பான வெட்கம்தானே,......................,!?





என் உணர்வுகளை கோப்பையில்

ஊற்றி நீ பருக தர வேண்டும்

என்ற தீரா தாகம்தான் எனக்கு,

பாவின் சொற்களிடம்

உன் உள்ள முகவரியை

நீ உள்ள முகவரியை தெரிவித்து,

அனுப்பி வைக்க வேண்டும்

என்ற விருப்பமும்தான்,

அது இயலாமல்தான் இணையத்தின்

கோப்புகளாய் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

இயலாமையை நினைத்து வருத்தபடவில்லை,

ஏனென்றால் உன் இயல்பான வெட்கம்தானே,

என் இயலாமைக்கு காரணம்.





பொய் அழகுதான்!!!!


பாட்டுக்கு பொய் அழகு என்றாய்,

உனக்காக நான் செய்த பாவில்

மாவிலை தோரணம் போல் செய்த

சொல் அழகில்லையா? என்று

திமிர் கொண்டு கேட்டேன்.

சிரித்து கொண்டே, பா எழுதிய தாளை

கூட பார்க்காமல், உன் பாடல் மிக அழகு

என்று, திமிர் அடங்கி உணர்ந்தேன்,

பொய் அழகுதான் காதலில் என்று.







பள்ளிக்கு செல்லும் நீ


பள்ளிக்கு செல்லும் நீ, உன் தாயிடம்

உரக்க சொல்லி போகிறாய்,

நானும் அறியட்டும் என்று!?

போகும் பொழுது

உன் நிழலெடுத்து,

நினைவை விட்டு செல்கிறாய்.

உறக்கம் கெடுத்து,

கனவை கொடுத்து செல்கிறாய்.

ஒன்று கனவை கொடு, அல்லது உறக்கம் கொடு

இரண்டும் சேர்ந்தே செய்தால் யார் விழியில்

சென்று நீ தந்த கனவை காண்பேன் நீயே சொல்

வாழ்த்து அட்டை நீட்டுகிறேன்,


வாழ்த்து அட்டை நீட்டுகிறேன்,

வாங்க மறுக்கிறாய் நீ, எதற்காக மறுக்கிறாய்

என்று சிந்திக்காமல்,ஏன் வாழ்த்து வாங்கினேன்

என்று என் சிந்தை போன வழியை மறித்து

என் அகத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தாய்.

உன்னை தவிர எனக்கு ஏதடா பெரும் பரிசு?

என்றாய் செல்லக் கொஞ்சலோடு.

அன்று உன்னை எனதாக்கி,என்னை நானாக்கிய காதல்

தந்த வாழ்க்கை பரிசு பெரிதாக தோன்றியது.

காதல் தந்த வாழ்க்கையை காதலிடம்கூட கேட்காமல்

காதலோடு உனக்கு தருகிறேன் தட்டாமல் வாங்கிக்கொள்.

ஏனென்றால், விருப்பத்தோடு தருவதுதான்,

நம்மை காதலுக்கு நெருக்கமாய் வைத்திருக்குமாம்.





“ பரிசாக நீ போதும் எனக்கு”




பிரிவு என்னும் சொல்லுள்ள கவிதையை

உனக்கு வாசிக்களித்தேன், அன்று பிரிவு

என்னும் சொல்லடித்து அக்கவிதை தாளை

திருப்பியளித்தாய்.


அதே நீ, பிரிவளித்து சென்றிருக்கிறாய்,

மூன்று நாட்கள்தான் என்றாலும்,

உன்னோடு இருக்கும் போது தாராளமாய்

செலவழிந்த நொடிகள், இன்று கஞ்சத்தனமாய்

கழியவே மாட்டேன் என்கின்றன.

சிறிய இடைவேளைதான் என்றாலும்

பிரிவுகழிந்து வரும் போது இறுக்கமாய்

என்னை, அன்னை போல் அணைத்து கொள்வாய்......

எனும்போது, காத்திருப்பதில் தவறில்லை என்றுதான்

எண்ணத் தோன்றுகிறது.


முத்தங்கள், உணர்வூட்டங்கள், கனவு-இரவுகள்

என மட்டும் பரிசளித்த நீ, இன்று ஏக்கங்கள் எனக்களித்து

சென்றிருக்கிறாய், நீ அளிக்கும் எதுவும் பரிசுதான் என்று

இதை இப்போதைக்கு ஏற்றுக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட பரிசுகளை தருவதானால், பரிசுகளை

நிறுத்திக் கொள்,

பரிசாக நீ போதும் எனக்கு

புதுக்கவிதையாய்!


என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து  நான் சொன்னேன்
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றனஎன்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!


சே தன் மனைவிக்கு எழுதிய கடிதம்





அன்பிற்குரியவளே!

உன்னை பிரிந்து போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் உயரிய செயலுக்காக தியாகங்கள் செய்ய விரும்பிகிற இந்த மனிதனை நீ அறிவாய்.

  உள்ள-திடத்தை இழந்து விடாதே. ஒரு வேளை, நான் இறந்து போனால்,என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டு செல்லும் பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களை கண்டு நம்மை போலவே அவர்களும் சினம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  காலமும் தூரமும் நம்மை பிரித்தாலும்,எப்போதும் நான்  உங்களுடன்தான் இருப்பேன்,என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டு பிரிகிறோம் என்றுஎண்ணும்போது வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களை சுரண்டும் எதிரிகளுடன்தான் போரிட சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.

 

உன் உடல் நல்த்தையும் கவனமாக பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள்.என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாக பெற்றதையும் எண்ணி பெருமைப்படுகிறேன்.

 இந்த போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதி தருணத்தில் உன்னை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

 

மருதன் எழுதிய

சேகுவேரா-வேண்டும் விடுதலை நூலிலிருந்து

பக்கம்:174

ஏன்?எதற்கு?எப்படி?


உன்னை ஏன் காதலிக்க கூடாது
என்று உள்ளம் கேட்டது,
இன்று வரை ஏன்
உன்னை காதலிக்க வேண்டும்? என்று
என் உள்ளத்திடம் கேட்டதே இல்லை
ஏனென்றால் நீ என் உள்ளம் காட்டிய
பெண்ணாக இருந்தாலும், இனி என்
உள்ளம் மறுத்தாலும் கேட்பதாயில்லைநான்,
எல்லாம் ஒரு சுயநலம்தான்
ஏனென்றால்,எல்லோருக்கும் பெண்ணை காதலிக்கும்
வாய்ப்பு கிடைக்கும், எனக்கு மட்டும் தேவதையை
காதலிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

எதற்குதான் உன்னை காதலித்து
தொலைத்தேனோ?என்னை தொலைக்கத்தான்
உன்னை காதலிக்க துணிந்தேனோ!!!!!

இவ்வளவு ஏன்?
எப்படி  காதலிக்க வேண்டும் என்று
கூட ஆலோசனை கேட்டதில்லை?
உள்ளத்திடம், உன்னை உள்ளம்
காட்டியதுதான் தாமதம்,
காதலோடு இலவச  இணைப்பாக
கவிதைகளையும் அல்லவா எடுத்து
வந்திருக்கிறாய்,எப்படி எப்படிஎன்று கேட்க முடியும்
                                                                                         
என் எழுத்துகள் எதுவுமே கவிதைகள் ஆகிப்போகின்றது,
உன் கண்கள் பார்த்து, கன்னம் சிவக்க நீ சிரிக்கும்
மௌனச்சிரிப்பில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

உனக்காக கவிதை

தேடித்திரியும் என் உள்ளம்

உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது,

உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே

உன்னை பற்றி மட்டுமே எழுதி முடிக்கிறது

பேனா மை!

அப்படி என்ன எழுதிவிடுவாய்?

அவளுக்கு தெரியாமல், அவளைப் பற்றி

என்று எழுதுகோலிடம் கேட்டால்,

அப்படி என்ன  காதலை

அவளிடம் சொல்லிவிடுவாய்?

அவளுக்கு அறியாத காதலை

நான் நாளும் காதலை தெரிவிக்கிறேனாம்

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?



நான் உன்னில் என்னை தேடும் தருணம்

என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு

இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய்

இதழ்களும் சலிக்காமல் எப்படித்தான் ஒத்துபோகிறதோ?

சலிப்புகள் சிலநேரங்களில் உனக்கு எட்டிப்பார்த்தாலும்

கூச்சம் என்று கூச்சமே இல்லாமல் பொய் வேறு சொல்லிவிடுகிறாய்

நான் சினம் கொள்ளக்கூடாதென்று.

உன் அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

சிறு குழந்தையை கொஞ்சினாலும்,

எனக்கு மட்டும்தான் அது என்று உரிமை

கொண்டாடுகிறாய் சரி, ஆனால், சிலநேரம்

யாரையும் திட்டினாலும்,என்னை திட்டுவதனாலும்

என்னை மட்டும் திட்டுஎன்கிறாயே உன் அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

முன்பெல்லாம் எனக்கு அப்படி தோன்றியதில்லை

ஆனால், நீ இப்பொழுது யாரிடம் பேசினாலும்

எனக்கு சினம் வருகிறது என்கிறாய்,

நான் யாரிடம் பேசினாலும் உன்னை பற்றிதான்

வெகுவாக பேசுகிறேன் என்பதை புரியாமல்;

அடம்பிடிக்கும் உன் ஆழமான அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

என் உடல் சூடெல்லாம், உன் உடல் தழுவியதால்

நழுவின என்று நான் நழுவிச்செல்லும் தருணம்

உன் உடல் காய்ச்சலில் கொதிப்பதாகக்கூறி

உன் அருகில் மீண்டும் என்னுடல் பற்றிக்கொண்டது,

தணிப்பவளும், வெட்பம் கூட்டுபவளும் நீயாயிருக்க

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

 

புரட்சிக்கருத்துகள் என்னை மூளைச்சுற்றி

வந்தாலும், பூக்களாய் என் சிந்தையெங்கும்

குடியிருக்கும் நீ,எனக்காக நான் ஏற்றுக்கொண்ட

கருத்துக்களை பிடிக்காவிட்டாலும் வலிந்து படிக்கும்

உன்  அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

நம் இதழ்களை தடுக்க முடிவதில்லை!




என் காதினிக்க பேசுகிறாய்,

நான் காதலிக்க பேசுகிறாய்,

காதலித்து பேசுகிறாய்,

எவ்வளவுதான் பேசினாலும்

புதிதாய் பேசுவதுபோல் பேசுகிறாய்,

நீ பேசும் சொற்கள் வெளிப்படும் போது

உன் இதழ்கள் என் இதழ்களை அழைப்பது

போலவே இருப்பதனால்தானோ என்னவோ

நம் இதழ்கள் சேறுவதை என்னால்

தடுக்கவே முடிவதில்லை.

எதிர்பார்த்து நிற்கும்!!!!




கனவுகள் ஓயாமல்
என் அகக்கரையில் இடித்தாலும்,
அலை எதிர்பார்த்து நிற்கும்
கரை போல அலை பாய்கிறது என் விழி  


ஏதாவது தொடர்பு கொண்டு சொல்!!!!


என் சொற்கள் நோய்வாய்பட்டுக் கிடக்கின்றன,
உன் சொல் கேளாமல்,
உனக்காக கவிதை எழுத அமர்ந்தால் சொற்கள்
என் சொல் கேளாமல், உன் சொல் கேட்க விருப்பபட்டு
நோன்பு கடைபிடிக்கின்றன, சொல் ஊமையாகி போனேன்,
ஏதாவது தொடர்பு கொண்டு சொல்,எனக்காக இல்லாவிட்டாலும்
சொற்களுக்காக.

உன் காலடி தேடி!!!!!!!!

நீ ஊருக்கு சென்றதை அறியாமல்,
உன் காலடி தேடி ஊர்கின்றன,
என் கண்கள்.

உன் கூச்சம் !!!!!!!!!!!!!!!!!

தொடுதல் என்பது புலனால்

மட்டுமே வாய்ப்பது என்று

நினைத்திருந்தேன்,

உன் நினைவால் கூட வாய்க்கும்

என்று இன்றுணர்ந்தேன்,

என் தொடுதல் உன்னை

கூச்சப்படுத்தியதாய் கூறி,

உன் கூச்சத்தின் மிச்சத்தை என்னிடம்

விட்டு சென்றாயோ, என்னவோ?

உன் கூச்சம் நேற்று என்னை

தீண்டாமல் இன்று தீண்டுகிறது,

காற்றின் தொடுதல் கூட

என்னை கூச்சப்படுத்தும்படியாக!!!! (நல்ல பழி வாங்கல்தான் போ!)

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து!


உன்னை முத்தமிட்டபின்பு

என் இதழ்கள் உணவை தொட

மறுக்கின்றன,

அதோடு நில்லாமல் , என் நிழலோ!

உன் நிழல் பட்ட இடம் கண்டால்

அவ்விடம் விட்டு நகரவே மறுக்கிறது,

என்னோடு வரவும் மறுக்கிறது,

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து

அங்கேயே தங்கிவிடுகிறது போலும்! 

மொத்தமாக கிள்ளி போகிறாய்!


கிள்ள வேண்டும் போலவே

தோன்றுகிறது என்றாய்,

எனக்கும்தான் உன்னை அள்ள

தோன்றுகிறது!

என்று எனக்கு நானே 

உள்ளத்தில் கூறிக்கொண்டேன்.

ஆனால், நீ அள்ளி முடியும்
கூந்தலிலேயே என் உள்ளம் மட்டுமல்லாமல்,

என்னையும் மொத்தமாக கிள்ளி போகிறாய். 

காதலாய் வடிந்து ஒடும்!!!!!


என் நண்பன் ஒரு குவளை இதை பற்றி ஒரு கவிதை வடி பார்ப்போம் என்றான்

அவனிடம் நான் அளித்த்து இதோ

 

ஒரு குவளை கொடுத்து

கவிதை வடிக்க சொன்னாய்,

குவளை ஒன்றும் என்னவளின்

நினைவுதுளிகள் தங்கி நிற்கும்

உள்ளக்கிளைகளும் அல்ல,

அதன் இலைகளும் அல்ல,

ஒரே ஒரு முறை குவளையின்

ஏதாவது ஒருபுறத்தில் என்னவளின்

பெயரை எழுதிப் பார்,

கவிதை நான் வடிக்க தேவையில்லை,

கவிதை காதலாய் வடிந்து ஒடும்

நீ காட்டிய குவளையின் விளிம்பில்......

நிழல் கண்ணாடியின் கண்டனம்


உன் வீட்டு நிலை கண்ணாடி

எனக்களித்த கண்டன ஓலை,

 

உன்னவளிடம் சொல்லி வை,

தினமும், நிழல் படும்படியாய் நின்று விட்டு

உண்மையை மட்டும் தன்னோடு கொண்டு

சென்று விடுகிறார்ள்!

இது, இனிப்பு காண்பித்து, குழந்தையை

ஏமாற்றுவது போல் உள்ளது,

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

நான் கூறினேன்,

நீ ஒன்றும் அவளை கடிந்து கொள்ளாதே,

அவள் தன் நிழல் உன்னிடம் விடுத்து,

உண்மை தனதாய் கொண்டு வருவதே,

அந்த உண்மை எனதாய் இருப்பதால்தான்

நான் அவள் நிழலாய் பின் தொடர்வதால்தான்.

என்று கூறி ஏதோ அமைதி படுத்தினேன்

உன் வீட்டு நிலைக் கண்ணாடியை.

கொள்ளை அழகுதான் , எனக்கு!

என் எழுத்து அழகாக இருக்காது,

நீ பார்த்தால் கிண்டலடிப்பாய் என்று

அழகாக சலித்து கொண்டாய்,

(சலித்து கொள்வதிலும் உன் அழகு

எப்படிதான் தெறித்து விழுகிறதோ!!!!!)

எழுத கற்றுக் கொள்ளும்

குழந்தையின் கிறுக்கல்கள் என்றுமே

அழகுதானே, தாய்க்கு !!!!!

அதுபோல, உன் எழுத்தைவிடு

நீ வைக்கும் புள்ளிகூட,

கோலமிட்ட்தை போல் என்றும்

கொள்ளை அழகுதான் , எனக்கு!

ஏமாறுவதானால் இவளிடம் தான்

புவி சுழலும்

பகல் அகலும்,என் நிழலும்

என்னை விட்டு நகரும்

நான் தனிமை உணரும் பொழுதில்

உன் நினைவு என் நிழலாய்

என்னை அருகும்,

என் தொண்டை குழி உலரும்.

உன் பெயரை உளரும்,

தனிமையில் இருக்கும்

என்னை உன் நிழல் நெருங்கும

இதழில் புன்னகை பூ பூக்கும்,

இதழ் நெருங்கி பூ பறிக்கத்தான் வருகிறாய்

என்று காத்து என் இதழ் தாங்கி நிற்பேன்.

ஆனால், நீயோ புன்னகைக்கு புன்னகை போதும்

என்று ஏமாற்றி செல்வாய்.

மீண்டும் என் இதழ்கள் புன்னகை பூக்கும்,

ஏமாறுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி

என கிண்டல் செய்யும் என் இதழ்கள்,

நான் என் இதழ்களிடம் சொல்லடக்க சொன்னேன்,

எங்கே உன் இதழ்களுக்கு கேட்டு விடுமோ?

நீங்கள் இவளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்,

ஏமாறுவதானால் இவளிடம் தான்

ஏமாற வேண்டும்....என்று

காதல் ஜனநாயகமானால்...- லோப முத்ரா




தலித்துகள் கல்வி கற்காதவரை
விழிக்காதவரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்த ஊரில்
"அமைதி" இருந்தது!!
பெண்கள் கல்விகற்காதவரை
விழிக்காத வரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்தக் குடும்பத்தில்
"நிம்மதி" இருந்தது!!
அந்த ‘அமைதி' ஒழிக!
அந்த ‘நிம்மதி' ஒழிக!
ஒருவர் "பொறை" இருவர் நட்பு
சரிதான்;
எப்போதும் "பொறை" யாருக்கு?

சமூகத்தின் ஒரு பகுதியை
முடமாக்கிவிட்டு
சமத்துவம் பேசுவது அர்த்தமற்றது
குடும்பத்தின் செம்பாதியை
ஊமையாக்கி விட்டு
ஜனநாயகம் என்பது
சாத்திய மற்றது.
‘குடும்ப தினம்' எதற்கு?
போற்றுவதற்கா
காப்பதற்கா?

போற்றுவதெனில் எதைப்
போற்ற விளைகிறாய்?
காப்பதெனில் எதைக்
காக்க விளைகிறாய்?
கணவன், குழந்தை
குடும்ப கவுரவம் இவற்றுக்காய்
உணர்ச்சிகளைக் கொன்று
தன்னைச் சிதைத்து
பிணமாய் வாழும்
பெண்மையைப் போற்றவோ!!

தன்னை இழந்து
தன்நாமம் கெட்டு
சம்சார சாஹரத்தில்
தீர்க்க சுமங்கலியாய்
என்றும் சுமைதாங்கியாய்
பெண்கள்
இருத்தலைக் காக்கவோ!!
சரி! சரி!

குடும்பம் என்பது யாது?
விதியே என வாய்த்ததுவோ!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டதால்
புளியமரம் ஏறுவதோ?
குடும்பம் என்பது யாது?
நாகரீக சமூகத்தின்
அடிப்படை அலகு.
இந்த அடித்தளம் தகர்ந்தால்
சகலமும் நொறுங்கும்
விலங்கினும் கீழாய்
வாழ்க்கை இழியும்.

குடும்பம் என்பது யாது?
முர்டோக் என்றோரு
மானிடவியலார் கூறுகிறார்:
"கூடி ஒரு இல்லத்தில் வாழ்ந்து
பொருளாதாரத்தில் ஒத்துழைத்து
வம்சவிருத்தியில் ஈடுபடும் குழு."
மேலும் விரிக்கிறார்:
"சமூகம் அங்கீகரித்த
சட்டம் வரையறுத்த
ஒத்த வயதுடைய
ஒருவனும் ஒருத்தியும்
பாலியல் உறவு கொண்டு
பிள்ளைகள் பெற்று
(அ) தத்தெடுத்து
வாழ்வதன்னியில்
உடலாலும்
உணர்வாலும்
பொருளாதாரத்தாலும்
ஒன்றி வாழ்வது."

குடும்பம் என்பது
தனிநபர்த் தேவையின்
விளைவு மட்டுமா?
அல்ல அல்ல.
சங்கிலிக் கண்ணிகள்
அறுந்திடாமல்
கூடிவாழும் சமூகப் பண்பாட்டின்
கூறுகளை
தலைமுறை தலைமுறையாக
கைமாற்றி கைமாற்றி
வளப்படுத்தி பலப்படுத்திட
கடமையும் பொறுப்பும் கொண்ட
அடித்தளமாகும்.

‘இன்பம் துய்க்கவும்'
‘இன்னல் எதிர்கொள்ளவும்'
கூடிவாழ வேர்கொள்வதுவே
குடும்பம் என்பதை
வரலாறு சொல்லும்.
சொத்தின் மீது
ஆசை வந்ததும்
சொந்தம் என்பதில்
மேல் கீழ் வந்தது
ஆணின் தலைமை
திணிக்கப்பட்டது.
ஆஸ்திக்கு ஆணென
அர்த்தம் புகுத்தப்பட்டது

பெண்ணின் நிலைமை
அடிமையானது
சிரிப்புக்குக் கூட
வரம்புகள் போடப்பட்டது
சமூக வேரில்
வெந்நீர் ஊற்றப்பட்டது
‘குடும்பம்' இங்கே
சுமையாய்ப் போனது.
‘கூட்டுக் குடும்பமோ'
‘தனிக் குடும்பமோ'
அததற்கு ஆயிரம் பிரச்சனைகள்!
"பெண்ணே சுமை தாங்கி"
இரண்டுக்கும் பொதுவானது.

விவசாய வாழ்க்கையில்
உழைப்பில் இருந்த பங்கையும்
பின் இழக்க நேர்ந்தது
போராட்டங்கள் ஊடாகவும்
பொருளாதாரத் தேடலாகவும்
உழைக்கும் வாய்ப்பு
பெண்களுக்கு பெறப்பட்டது
இன்று, வீடு வேலைத்தளம்
இரண்டு ‘ஷிப்டு'
பெண்ணின் இடுப்பொடிகிறது
கூட்டை உடைத்தெறி என
கேட்பதில் வியப்பில்லை

கட்டுத் தளைகளை வெட்டியெறிய
முட்டி மோதுவதில் தவறே
இல்லை
கூடு சிதைந்தால் நாடு சிதையும்
கூடு தகர்ந்தால் அராஜகம் ஓங்கும்
கூட்டைக் காப்பது எப்படி?
இனி அது
பெண்ணின் பொறுப்பு அல்ல
ஆணின் பொறுப்பு
‘வாழ்க்கைத் துணை' என
ஏனையோரை விஞ்சி
ஒரடி முன்வைத்த
வள்ளுவன்
கணக்கும் மாறியது
வாழ்க்கை ‘துணை' அல்ல
வாழ்க்கை ‘இணை' என்போம்.

சுகம், துக்கம்,
சுமை, சுதந்திரம்
எல்லாமே இருவருக்கும்
அடுக்களை முதல்
குழந்தை வளர்ப்பு வரை
எல்லாவற்றிலும்
‘புரிதலும், பகிர்தலும்'
குடும்ப ஜனநாயகத்தின்
அச்சாணி ஆகும்.
இனி தொடங்குவதையாவது
ஜனநாயகத்தில்
கால்பதித்து தொடங்கலாமே!

ஜனநாயகம்
அரசியலுக்கு மட்டுமல்ல
வாழ்வுக்கும் தான்.
காதலில் அதைத் துவங்கு
காதல் ஜனநாயகமானால்
குடும்ப ஜனநாயகம்
தானே பூக்கும்...
காதல் ஜனநாயகம்!
அதெப்படி?

ஈழப்பெண் கவிஞர்
நளாயினி தாமரைச் செல்வன்
கூறுகிறார்:
"காதல் என்றால்
என்னவென்று தெரியுமா?
உனக்கு
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்."
நீங்கள் தயாரா? 

நன்றி

லோப முத்ரா
http://www.keetru.com/literature/poems/lopamuthra.php

ஒரு மாறுபாடு



விழித்திருந்த நேரமாக இருந்தாலும் சரி,

விழி திறக்கும் நேரமானாலும் சரி,

என் கனவுகள் விழித்தே இருக்கின்றன.

விழித்த நேரத்தில் உன் நிழலையும்,

அவை கழித்த நேரத்தில் உன் நினைவையும்,

விழித்து காவல் காப்பதுதான்

ஒரு மாறுபாடு.

உன் இயல்பான வெட்கம்தானே,......................,!?





என் உணர்வுகளை கோப்பையில்

ஊற்றி நீ பருக தர வேண்டும்

என்ற தீரா தாகம்தான் எனக்கு,

பாவின் சொற்களிடம்

உன் உள்ள முகவரியை

நீ உள்ள முகவரியை தெரிவித்து,

அனுப்பி வைக்க வேண்டும்

என்ற விருப்பமும்தான்,

அது இயலாமல்தான் இணையத்தின்

கோப்புகளாய் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

இயலாமையை நினைத்து வருத்தபடவில்லை,

ஏனென்றால் உன் இயல்பான வெட்கம்தானே,

என் இயலாமைக்கு காரணம்.





பொய் அழகுதான்!!!!


பாட்டுக்கு பொய் அழகு என்றாய்,

உனக்காக நான் செய்த பாவில்

மாவிலை தோரணம் போல் செய்த

சொல் அழகில்லையா? என்று

திமிர் கொண்டு கேட்டேன்.

சிரித்து கொண்டே, பா எழுதிய தாளை

கூட பார்க்காமல், உன் பாடல் மிக அழகு

என்று, திமிர் அடங்கி உணர்ந்தேன்,

பொய் அழகுதான் காதலில் என்று.







பள்ளிக்கு செல்லும் நீ


பள்ளிக்கு செல்லும் நீ, உன் தாயிடம்

உரக்க சொல்லி போகிறாய்,

நானும் அறியட்டும் என்று!?

போகும் பொழுது

உன் நிழலெடுத்து,

நினைவை விட்டு செல்கிறாய்.

உறக்கம் கெடுத்து,

கனவை கொடுத்து செல்கிறாய்.

ஒன்று கனவை கொடு, அல்லது உறக்கம் கொடு

இரண்டும் சேர்ந்தே செய்தால் யார் விழியில்

சென்று நீ தந்த கனவை காண்பேன் நீயே சொல்

வாழ்த்து அட்டை நீட்டுகிறேன்,


வாழ்த்து அட்டை நீட்டுகிறேன்,

வாங்க மறுக்கிறாய் நீ, எதற்காக மறுக்கிறாய்

என்று சிந்திக்காமல்,ஏன் வாழ்த்து வாங்கினேன்

என்று என் சிந்தை போன வழியை மறித்து

என் அகத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தாய்.

உன்னை தவிர எனக்கு ஏதடா பெரும் பரிசு?

என்றாய் செல்லக் கொஞ்சலோடு.

அன்று உன்னை எனதாக்கி,என்னை நானாக்கிய காதல்

தந்த வாழ்க்கை பரிசு பெரிதாக தோன்றியது.

காதல் தந்த வாழ்க்கையை காதலிடம்கூட கேட்காமல்

காதலோடு உனக்கு தருகிறேன் தட்டாமல் வாங்கிக்கொள்.

ஏனென்றால், விருப்பத்தோடு தருவதுதான்,

நம்மை காதலுக்கு நெருக்கமாய் வைத்திருக்குமாம்.