பிரிவு என்னும் சொல்லுள்ள கவிதையை
உனக்கு வாசிக்களித்தேன், அன்று பிரிவு
என்னும் சொல்லடித்து அக்கவிதை தாளை
திருப்பியளித்தாய்.
அதே நீ, பிரிவளித்து சென்றிருக்கிறாய்,
மூன்று நாட்கள்தான் என்றாலும்,
உன்னோடு இருக்கும் போது தாராளமாய்
செலவழிந்த நொடிகள், இன்று கஞ்சத்தனமாய்
கழியவே மாட்டேன் என்கின்றன.
சிறிய இடைவேளைதான் என்றாலும்
பிரிவுகழிந்து வரும் போது இறுக்கமாய்
என்னை, அன்னை போல் அணைத்து கொள்வாய்......
எனும்போது, காத்திருப்பதில் தவறில்லை என்றுதான்
எண்ணத் தோன்றுகிறது.
முத்தங்கள், உணர்வூட்டங்கள், கனவு-இரவுகள்
என மட்டும் பரிசளித்த நீ, இன்று ஏக்கங்கள் எனக்களித்து
சென்றிருக்கிறாய், நீ அளிக்கும் எதுவும் பரிசுதான் என்று
இதை இப்போதைக்கு ஏற்றுக் கொள்கிறேன்.
நிறுத்திக் கொள்,