தபூ சங்கரும் நானும்

--> -->
நீ, தலைகுனிந்து வெட்கப்படுவதால்
வெகு நாட்களாய் காத்துக் கிடக்கிறது
வானம், உன் வெட்கம் தரிசிக்க -தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கூச்சத்தை விட்டுவிடு என்றால்
உன்னிடம் வெட்கப்படாமல் யாரிடம்
வெட்கப்படுவேன் என்கிறாய்.....
சரி, சரி வெட்கப்படுக்கொண்டே இரு
அப்பொழுதுதான் வெட்கம் திருடிக் கொண்டே
உன் மீது மேலும் காதல் கொள்வேன்..

தபூ சங்கரும் நானும் -3

--> --> --> -->
சிந்திய மழைத்துளி மேகத்துக்குள் போவதில்லை
ஆனால், ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய் விடுகின்றதே - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ சிந்தும் முன் உன் வெட்கம்
ஒழித்து வைக்கும் இடம் தெரிவதில்லை,
ஆனால், முத்தம் கொடுத்தால் மட்டும்
அத்தனை இருப்பையும் கொட்டி விடுகிறாய்,
முதலிலேயே இடம் தெரிந்திருந்தால்,
முத்தம் விடுத்து உன் வெட்கம்
சேகரித்திருப்பேன்,
ஒரு புத்தக கவிதைகள் கிடைத்திருக்குமே?


தபூ சங்கரும் நானும் - 2

--> -->
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடிகள்
பட்டுப் போகிறது,
உன் உடை காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறதே. - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன் உடைகள் காயும் கொடிகளில்
ரோஜாக்கள் பன்னீர் வாசனையோடு மலர்கின்றதாம்
உன் வியர்வையின் பயனாய் இருக்குமோ?

தபூ சங்கரும் நானும் - 1

-->
-->
--> -->
எவ்வளவு பெரிய கூட்டத்திலும்
தொலைந்ததே இல்லை.
ஆனால், உன்னை பார்க்கும்போது
மட்டும், தனியாக இருந்தாலும்
தொலைந்து போகிறேன். -தபூ சங்கர்


--> -->
என்னை கண்ணில் காணா தருணங்களில்
என்னை தேடும் உன் விழிகளுக்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
தொலைந்து போகலாம்..... 

தபூ சங்கர், நான், கவிதைகள் மற்றும் என் காதல்

-->
காதல் அனைவருக்கும் பொதுவானது காதலர்கள்தான் மாறுபடுகிறார்கள்.
காதல் என்றும், இன்றும் அப்படியேதான் இருக்கிறது, காதல் சாதியை எளிதாக வென்று விடுகிறது, மனிதர்களால்தான் சாதியை இன்னும் துறக்க இயலவில்லை.
யாருடைய காதல் கவிதைகளாயினும், படிக்கின்றவர் காதலை காதலிப்பவராக இருந்தால் கண்டிப்பாக ஒரு மென் புன்னகை இதழும் தானாய் வந்து தவழும் அப்படி என்னுள்ளும் தவழ்ந்தது.
தவழச்செய்தது தபூ சங்கரின் கவிதைத் தொகுப்புகள், அவை எனக்காகவே எழுதப்பட்டதா என்று கூட எண்ண தோன்றியிருக்கிறது.
கவிதைகளை எழுதுபவர்கள் பலருக்கு பொதுவான தருணங்களை வடிவமைத்து கவிதைகளாக கோர்த்துவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது, ஏனென்றால் காதல் பொதுவான தருணங்களை தானாய் உள்ளடிக்கியது, காத்திருத்தல், இணைந்திருத்தல், பிரிவு, மகிழ்ச்சி.....என பொதுவானவை பல.
சில, தனிப்பட்ட யாருக்கும் வாய்க்காத தருணங்கள் ஒவ்வொரு காதலுக்கு அமையும், அது அவர்கள் காதலுக்கு மட்டுமே உரித்தானது.
இப்படித்தான் தபூ சங்கரின் கவிதைகளும், என்னுள்ளும் ஏதோ கவிஞன் இருப்பது போல போலி பிம்பத்தை எனக்கு காட்டி, சில அழகான சொற்க்குவியல்களை என்னுள் வீசிச்சென்றது, அவை கவிதைகளா என்பது ஆனால், கண்டிப்பாக என்னவளுக்கான காதல்...........

-->
தொடர்பவை.... தபூ சங்கர் என்னில் தெளித்த சில உணர்வுகள்
மற்ற கவிஞர்கள் தெளித்தது அடுத்து



நான் எம்மாத்திரம்

நீ கண்ணாடி முன் நின்றால்,

நிழலை உள் வாங்கும்

கண்ணாடியே நிலை கொள்ளாது,

நான் எம்மாத்திரம்

நீ பிறந்த பொழுதுக்காய் காத்து நிற்கிறேன்

நீ பிறந்த பொழுது என்ன செய்து

கொண்டிருந்தேன் தெரியாது,

ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்

காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்

நொடிக்கு வாழ்த்து சொல்ல............

எப்பொழுது கடக்கும் என்று

உன்னோடு வாழ்ந்து களிக்கும்

பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,

உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,

அதனால்தான் காத்திருக்கிறேன்,

நொடிக்கடக்க காத்து கிடக்கும்,

நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து

சொல்லும் நொடியை கடிகார முள்

எப்பொழுது கடக்கும் என்று

தபூ சங்கரும் நானும்

--> -->
நீ, தலைகுனிந்து வெட்கப்படுவதால்
வெகு நாட்களாய் காத்துக் கிடக்கிறது
வானம், உன் வெட்கம் தரிசிக்க -தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கூச்சத்தை விட்டுவிடு என்றால்
உன்னிடம் வெட்கப்படாமல் யாரிடம்
வெட்கப்படுவேன் என்கிறாய்.....
சரி, சரி வெட்கப்படுக்கொண்டே இரு
அப்பொழுதுதான் வெட்கம் திருடிக் கொண்டே
உன் மீது மேலும் காதல் கொள்வேன்..

தபூ சங்கரும் நானும் -3

--> --> --> -->
சிந்திய மழைத்துளி மேகத்துக்குள் போவதில்லை
ஆனால், ஒவ்வொரு முறையும்
நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும்
உன் கன்னத்துக்குள்ளேயே
போய் விடுகின்றதே - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ சிந்தும் முன் உன் வெட்கம்
ஒழித்து வைக்கும் இடம் தெரிவதில்லை,
ஆனால், முத்தம் கொடுத்தால் மட்டும்
அத்தனை இருப்பையும் கொட்டி விடுகிறாய்,
முதலிலேயே இடம் தெரிந்திருந்தால்,
முத்தம் விடுத்து உன் வெட்கம்
சேகரித்திருப்பேன்,
ஒரு புத்தக கவிதைகள் கிடைத்திருக்குமே?


தபூ சங்கரும் நானும் - 2

--> -->
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடிகள்
பட்டுப் போகிறது,
உன் உடை காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறதே. - தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உன் உடைகள் காயும் கொடிகளில்
ரோஜாக்கள் பன்னீர் வாசனையோடு மலர்கின்றதாம்
உன் வியர்வையின் பயனாய் இருக்குமோ?

தபூ சங்கரும் நானும் - 1

-->
-->
--> -->
எவ்வளவு பெரிய கூட்டத்திலும்
தொலைந்ததே இல்லை.
ஆனால், உன்னை பார்க்கும்போது
மட்டும், தனியாக இருந்தாலும்
தொலைந்து போகிறேன். -தபூ சங்கர்


--> -->
என்னை கண்ணில் காணா தருணங்களில்
என்னை தேடும் உன் விழிகளுக்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
தொலைந்து போகலாம்..... 

தபூ சங்கர், நான், கவிதைகள் மற்றும் என் காதல்

-->
காதல் அனைவருக்கும் பொதுவானது காதலர்கள்தான் மாறுபடுகிறார்கள்.
காதல் என்றும், இன்றும் அப்படியேதான் இருக்கிறது, காதல் சாதியை எளிதாக வென்று விடுகிறது, மனிதர்களால்தான் சாதியை இன்னும் துறக்க இயலவில்லை.
யாருடைய காதல் கவிதைகளாயினும், படிக்கின்றவர் காதலை காதலிப்பவராக இருந்தால் கண்டிப்பாக ஒரு மென் புன்னகை இதழும் தானாய் வந்து தவழும் அப்படி என்னுள்ளும் தவழ்ந்தது.
தவழச்செய்தது தபூ சங்கரின் கவிதைத் தொகுப்புகள், அவை எனக்காகவே எழுதப்பட்டதா என்று கூட எண்ண தோன்றியிருக்கிறது.
கவிதைகளை எழுதுபவர்கள் பலருக்கு பொதுவான தருணங்களை வடிவமைத்து கவிதைகளாக கோர்த்துவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது, ஏனென்றால் காதல் பொதுவான தருணங்களை தானாய் உள்ளடிக்கியது, காத்திருத்தல், இணைந்திருத்தல், பிரிவு, மகிழ்ச்சி.....என பொதுவானவை பல.
சில, தனிப்பட்ட யாருக்கும் வாய்க்காத தருணங்கள் ஒவ்வொரு காதலுக்கு அமையும், அது அவர்கள் காதலுக்கு மட்டுமே உரித்தானது.
இப்படித்தான் தபூ சங்கரின் கவிதைகளும், என்னுள்ளும் ஏதோ கவிஞன் இருப்பது போல போலி பிம்பத்தை எனக்கு காட்டி, சில அழகான சொற்க்குவியல்களை என்னுள் வீசிச்சென்றது, அவை கவிதைகளா என்பது ஆனால், கண்டிப்பாக என்னவளுக்கான காதல்...........

-->
தொடர்பவை.... தபூ சங்கர் என்னில் தெளித்த சில உணர்வுகள்
மற்ற கவிஞர்கள் தெளித்தது அடுத்து



நான் எம்மாத்திரம்

நீ கண்ணாடி முன் நின்றால்,

நிழலை உள் வாங்கும்

கண்ணாடியே நிலை கொள்ளாது,

நான் எம்மாத்திரம்

நீ பிறந்த பொழுதுக்காய் காத்து நிற்கிறேன்

நீ பிறந்த பொழுது என்ன செய்து

கொண்டிருந்தேன் தெரியாது,

ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்

காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்

நொடிக்கு வாழ்த்து சொல்ல............

எப்பொழுது கடக்கும் என்று

உன்னோடு வாழ்ந்து களிக்கும்

பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,

உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,

உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,

அதனால்தான் காத்திருக்கிறேன்,

நொடிக்கடக்க காத்து கிடக்கும்,

நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து

சொல்லும் நொடியை கடிகார முள்

எப்பொழுது கடக்கும் என்று