என்னை சினத்தோடு சீண்ட வரும்
பொழுதெல்லாம்...
அணைத்து அனைத்தும் தீண்ட வருவது போன்றே
வருகிறாயே, அது ஏன்?
ஆனால், உன் விரல்கள் என்னை தீண்டி
முட்டும் முன்னேயே, விரல்களோடு சண்டை
போட்டு கண்கள் தீண்டிவிடும் தொலைவிலேயே
வைத்து சினம் கொள்கிறாய் என் மேல் உன்
மாயை உண்மையாகவே எனக்கு பிடிக்கிறது...