பிறப்பிற்கு முன்பே தன் குழந்தைக்காக
தாய் தன் மார்பில் சேமித்து வைக்கும்…
பாலை போலவே, நீ இல்லாத பாலை
போன்ற உலகில் பத்திரமாக
உனக்கான காதலை
என் உள்ளத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்…
வந்து பருகிச் செல்
பிறப்பிற்கு முன்பே தன் குழந்தைக்காக
தாய் தன் மார்பில் சேமித்து வைக்கும்…
பாலை போலவே, நீ இல்லாத பாலை
போன்ற உலகில் பத்திரமாக
உனக்கான காதலை
என் உள்ளத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்…
வந்து பருகிச் செல்
நிம்மதியாக உறங்குகிறாய்…
ஆறு நிம்மதியில்லாமல் விழித்து கொண்டிருக்கிறது
செயற்கை அலைபேசிகளை
அனைவரும் பயன்படுத்த...
நீ மட்டும் குருவியை பயன்படுத்துகிறாயே?
இயற்கை என்ன உனக்கு அத்தனை நெருக்கமா?
-------------------------------------------------------------------------
என்னிடம் ரகசியம் கேட்கும் குருவிகள்
அத்தனையும், உன்னிடம் ரகசியங்களை
கொட்டிவிடுவதன் ரகசியம் என்னவோ?
என் வீட்டு கோழிகளுக்கு
நீ கொடுத்த முத்தமோ என்னவோ..
முட்டையில் கோழிகள் பதித்த
முத்திரையை பார்…
==========================
இளநீர் முட்டையாகிப் போனதும்
தென்னை மரத்தின் கீழ் நீ நின்ற குழப்பதினாலோ என்னவோ
பனை தாண்டி தென்னைக்கு வந்துவிட்டாயே
முத்தங்கள் கேட்கும் பொழுதுகளில்
சிணுங்கல் சத்தங்களை கொண்டே தடுத்துவிடுகிறாய்
ஒரு நாள் அல்ல மறுநாள் இதழில் நீ ஒழித்து வைத்திருக்கும்
உன் முத்த புதையலை திருடிவிடுகிறேன்…பார்..
பின் ஒரே ஒரு முத்தத்திற்காக..
முத்தங்களின் இருப்பு தீர்ந்த பிறகு
அதே சிணுங்கலோடு வந்து கெஞ்சி கொண்டிருக்க போகிறாய்