உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ கொஞ்ச கொஞ்சமாய் சொல்லும்
சொற்களுக்காக என் கவிதை தாள்
காத்து கிடைக்கிறது
உன் சொற்களின் வருகைக்காக
உன்னோடு பேச காத்திருக்கும் தருணங்களில்
தொலைவில் உன்னை கண்டுவிட்டால்,
சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன
என் இதழ்கள்