“முத்தங்களுக்காக காத்திருக்கும்,
உன் இதழ்களுக்காக, முத்தங்களோடு
காத்துக் கிடக்கின்றன,என் இதழ்கள்....”என்றேன்
“ச்சீ எந்நேரமும் இதே நினைப்புதானா”
என்கிறாய் வெட்கத்தோடு....
“இல்லை, இல்லை, அவை என்
சொற்கள் இல்லை, அவை என் உதடுகள்
உதிர்த்ததால், உதடுகளின் விருப்பமாக
இருக்குமோ, என்னவோ? என்று நான் சமாளித்தேன்...
சமாளிப்பிற்கு பரிசாக முத்தத்திற்கு சம்மதம் கிடைத்தது.