உன் வீட்டு நிலை கண்ணாடி
எனக்களித்த கண்டன ஓலை,
“உன்னவளிடம் சொல்லி வை,
தினமும், நிழல் படும்படியாய் நின்று விட்டு
உண்மையை மட்டும் தன்னோடு கொண்டு
சென்று விடுகிறார்ள்!
இது, இனிப்பு காண்பித்து, குழந்தையை
ஏமாற்றுவது போல் உள்ளது,
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.”
நான் கூறினேன்,
“ நீ ஒன்றும் அவளை கடிந்து கொள்ளாதே,
அவள் தன் நிழல் உன்னிடம் விடுத்து,
உண்மை தனதாய் கொண்டு வருவதே,
அந்த உண்மை எனதாய் இருப்பதால்தான்
நான் அவள் நிழலாய் பின் தொடர்வதால்தான்.”
என்று கூறி ஏதோ அமைதி படுத்தினேன்
உன் வீட்டு நிலைக் கண்ணாடியை.