சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?



நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?



அன்று நீ கழற்றி வைத்து
விளையாடிக் கொண்டிருந்த
கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்..
நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த
மனது, தினமும் என்னிடம் வந்து...
கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?

முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்


என் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்...
நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய்.
சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும்.
முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்

5 லிட்டர் Wine



என் வீட்டில் தினமும் 5 லிட்டர்தான் wine தயாரிக்க முடியும்..
பிறகென்ன வெறும் 5 லிட்டரில் நீ குளித்து முடித்தால்

உன் தலையணையும், உன் நினைவுகளும்



நீ தனித்து விட்டுச் செல்லும் தருணங்களில்,
உனக்கு முன்பாக வந்து அணைத்துக் கொள்கின்றன..
உன் தலையணையும், உன் நினைவுகளும்

எச்சில் விழுங்கி.....



உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு
போன்றவற்றால் எச்சில் விழுங்கி
கொண்டே இருக்கும் தொண்டை..
உணவுண்ணும் பொழுதும் வேகமாக
சோற்றையும் விழுங்கி விடுகிறது..

அது தெரியாமல் விரைவாக
ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..

சொட்டு சொட்டாய் நனையும் என் உள்ளம்



துவட்டாத தலைமுடியில் துண்டை துணைக்கு
அழைத்து வந்து நீ நிற்கும் பொழுது...
சொட்டு சொட்டாய் நனைந்து போகிறது
என் உள்ளம்

இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்?



கையில் எழுதுகோலை வைத்துக் கொண்டு..
இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்




விரல் வருடி கவிதை
எழுதச் சொல்கிறாய்..

பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

என் இதழ்களோடு பேசுவதில்லை



என் இதழ்கள்..
என் இதழ்களோடு பேசுவதில்லை...
இதழ் புண்ணை காரணம் காட்டி பேச மறுக்கிறது..
ஆனால், கண்டிப்பாக காரணம் அதுவல்ல
என்று எனக்கு தெரியும்...

என் சொந்த கடல் நான் தருகிறேன்..



கடலுக்குள் இறங்குவதை தடை செய்தாய்...
ஏனென்று புரியவில்லை...

அந்த கடல் வேண்டாம்..
என் சொந்த கடல் நான் தருகிறேன்..என்றாய்..

சொந்தமாய் கடலா? என்று வியந்து போனேன்..

பின்னர்தான் புரிந்தது
கடலுக்குள் சென்றால்..
அலை முத்தமிட்டுவிடும்..
என்பதற்காக நீயே ஒரு
செயற்கை கடல் அமைத்தது...

சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?



நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?



அன்று நீ கழற்றி வைத்து
விளையாடிக் கொண்டிருந்த
கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்..
நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த
மனது, தினமும் என்னிடம் வந்து...
கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?

முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்


என் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்...
நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய்.
சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும்.
முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்

5 லிட்டர் Wine



என் வீட்டில் தினமும் 5 லிட்டர்தான் wine தயாரிக்க முடியும்..
பிறகென்ன வெறும் 5 லிட்டரில் நீ குளித்து முடித்தால்

உன் தலையணையும், உன் நினைவுகளும்



நீ தனித்து விட்டுச் செல்லும் தருணங்களில்,
உனக்கு முன்பாக வந்து அணைத்துக் கொள்கின்றன..
உன் தலையணையும், உன் நினைவுகளும்

எச்சில் விழுங்கி.....



உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு
போன்றவற்றால் எச்சில் விழுங்கி
கொண்டே இருக்கும் தொண்டை..
உணவுண்ணும் பொழுதும் வேகமாக
சோற்றையும் விழுங்கி விடுகிறது..

அது தெரியாமல் விரைவாக
ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..

சொட்டு சொட்டாய் நனையும் என் உள்ளம்



துவட்டாத தலைமுடியில் துண்டை துணைக்கு
அழைத்து வந்து நீ நிற்கும் பொழுது...
சொட்டு சொட்டாய் நனைந்து போகிறது
என் உள்ளம்

இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்?



கையில் எழுதுகோலை வைத்துக் கொண்டு..
இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்




விரல் வருடி கவிதை
எழுதச் சொல்கிறாய்..

பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

என் இதழ்களோடு பேசுவதில்லை



என் இதழ்கள்..
என் இதழ்களோடு பேசுவதில்லை...
இதழ் புண்ணை காரணம் காட்டி பேச மறுக்கிறது..
ஆனால், கண்டிப்பாக காரணம் அதுவல்ல
என்று எனக்கு தெரியும்...

என் சொந்த கடல் நான் தருகிறேன்..



கடலுக்குள் இறங்குவதை தடை செய்தாய்...
ஏனென்று புரியவில்லை...

அந்த கடல் வேண்டாம்..
என் சொந்த கடல் நான் தருகிறேன்..என்றாய்..

சொந்தமாய் கடலா? என்று வியந்து போனேன்..

பின்னர்தான் புரிந்தது
கடலுக்குள் சென்றால்..
அலை முத்தமிட்டுவிடும்..
என்பதற்காக நீயே ஒரு
செயற்கை கடல் அமைத்தது...