என்னோடு எப்போதுமிருந்த தனிமை,
இப்பொழுதெல்லாம் துணை தேடி
என்னைவிட்டு சென்றுவிடுகிறது...
உன் தனிமையை சந்திக்க....!
என்னோடு எப்போதுமிருந்த தனிமை,
இப்பொழுதெல்லாம் துணை தேடி
என்னைவிட்டு சென்றுவிடுகிறது...
உன் தனிமையை சந்திக்க....!
இதயம் பறிப்பதும்,
மலர்கள் பறிப்பதும், கைவந்த கலையோ உனக்கு...?
உன்னைச் சொல்லி குற்றமில்லை...
கூந்தல் தேடி அமரும் மலரைப் போல
உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்,
என் இதயத்திடம் சொல்ல வேண்டும்
ஏதோ ஒரு பிடிவாத நாளில்
என் உள்ளம் உன்னை நினைப்பதில்லை....
இதயம் உனக்காய் துடிப்பதில்லை..என்றேன்...
சரிதான் போடி? என்று சினந்து சென்ற நீ..
ஏனடா என் உள்ளம் பறித்துச் சென்றாய்...?