என் நண்பன் ஒரு குவளை இதை பற்றி ஒரு கவிதை வடி பார்ப்போம் என்றான்
அவனிடம் நான் அளித்த்து இதோ
ஒரு குவளை கொடுத்து
கவிதை வடிக்க சொன்னாய்,
குவளை ஒன்றும் என்னவளின்
நினைவுதுளிகள் தங்கி நிற்கும்
உள்ளக்கிளைகளும் அல்ல,
அதன் இலைகளும் அல்ல,
ஒரே ஒரு முறை குவளையின்
ஏதாவது ஒருபுறத்தில் என்னவளின்
பெயரை எழுதிப் பார்,
கவிதை நான் வடிக்க தேவையில்லை,
கவிதை காதலாய் வடிந்து ஒடும்
நீ காட்டிய குவளையின் விளிம்பில்......