நீ கண்ணாடி முன் நின்றால்,
நிழலை உள் வாங்கும்
கண்ணாடியே நிலை கொள்ளாது,
நான் எம்மாத்திரம்நீ பிறந்த பொழுது என்ன செய்து
கொண்டிருந்தேன் தெரியாது,
ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்
காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்
நொடிக்கு வாழ்த்து சொல்ல............
உன்னோடு வாழ்ந்து களிக்கும்
பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,
உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,
உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,
அதனால்தான் காத்திருக்கிறேன்,
நொடிக்கடக்க காத்து கிடக்கும்,
நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து
சொல்லும் நொடியை கடிகார முள்