உன் மார் சாய்ந்து உறங்க வேண்டுமென்றாய்...
நான் உறங்க வேண்டாமா?
பொய்யை கூறவில்லையாடி என் கள்ளி
இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்
நீ பறிக்கும் முன்னே உன் கை அவை வருமென்று
மோதிட உள்ளம் துடிக்கிறது...
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்
Subscribe to:
Posts (Atom)
பொய்யை கூறவில்லையாடி என் கள்ளி
உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு,
உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக
அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை
கூறவில்லையாடி
என் கள்ளி
இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்
முத்தம் தா என்று இதழ்கள் கேட்க,
கன்னத்திற்கு வரம் கிடைத்தது..
கன்னமே கேட்டிருக்கலாம்,
இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்
நீ பறிக்கும் முன்னே உன் கை அவை வருமென்று
ரோசா பறித்து காண்பிக்கிறேன்
என்று சவால் விட்டுச் சென்றாய்..
அந்த நிறம், இந்த நிறம், எந்த நிறத்திலும்
ரோஜா பறிக்க முடியவில்லை பார்த்தாயா?
அப்பொழுதே சொன்னேனே நீ பறிக்கும்
முன்னே உன் கை அவை வருமென்று
மோதிட உள்ளம் துடிக்கிறது...
வண்டிகள் மோதிடுமோ?
என்று சாலையை கடக்க தயக்கத்தோடு
காத்திருக்கும் சிறுவன் போல
காத்திருக்கிறேன்......
தேவதை நீ கடந்து செல்லும் போது
மோதிட உள்ளம் துடிக்கிறது...
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்
விரல் வருடி கவிதைஎழுதச் சொல்கிறாய்..
பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்
Subscribe to:
Posts (Atom)