வெகு நாட்கள் கழித்து
உன்னோடு பேசும் பொழுதுகளில்..
மூச்சுவிடும் சிறிய இடைவெளியை
கூட நிரப்பும் படி...பேசுங்கள், பேசுங்கள் என்கிறாய்.
அப்பொழுதெல்லாம் நீ பேசும் கள்ளாகவே தோன்றுகிறாய்….
கள்ளிற்கு போதையுண்டு...சொல்லிற்குமா?
வெகு நாட்கள் கழித்து
உன்னோடு பேசும் பொழுதுகளில்..
மூச்சுவிடும் சிறிய இடைவெளியை
கூட நிரப்பும் படி...பேசுங்கள், பேசுங்கள் என்கிறாய்.
அப்பொழுதெல்லாம் நீ பேசும் கள்ளாகவே தோன்றுகிறாய்….
கள்ளிற்கு போதையுண்டு...சொல்லிற்குமா?
உன்னோடு பேச காத்திருக்கும் தருணங்களில்
தொலைவில் உன்னை கண்டுவிட்டால்,
சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன
என் இதழ்கள்
முதன் முதலாய் நீ கேட்ட
முத்தத்தின் பொழுதுகளில்….
உன் இதழும், உன் கன்னமும்
போட்டுக் கொண்ட சண்டையில்,
என் இதழ் ஏமாந்து போனதை எண்ணி இன்றும்
சிரித்துக் கொள்கின்றன என் கன்னங்கள்
இப்பொழுதாவது, இதழுக்கும்,
கன்னத்திற்குமான சண்டை ஓய்ந்துவிட்டதா?