அமாவாசை அதனால்தான் வாய்ப்பதில்லை..
மொட்டை மாடிக்கு
கதிரவன் காயவைத்த துணி எடுக்க
தினமும் போகாதே....
உன் ஊருக்கு மட்டும் அமாவாசை
அதனால்தான் வாய்ப்பதில்லை..
உன் வீட்டு மொட்டை மாடியில்
மட்டும் நிலவை சிறை வைப்பது
சரியில்லைதானே....
உன் முகத்தை காண்பித்தா தினமும்
நிலவுக்கு சோறூட்ட முடியும்....
பொழுதுகளில் வெட்கப்படுவாயோ?
வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்
இதழ்களை ஈரப்படுத்திக் கொள்கிறேன்..
Subscribe to:
Posts (Atom)
அமாவாசை அதனால்தான் வாய்ப்பதில்லை..
மொட்டை மாடிக்கு
கதிரவன் காயவைத்த துணி எடுக்க
தினமும் போகாதே....
உன் ஊருக்கு மட்டும் அமாவாசை
அதனால்தான் வாய்ப்பதில்லை..
உன் வீட்டு மொட்டை மாடியில்
மட்டும் நிலவை சிறை வைப்பது
சரியில்லைதானே....
உன் முகத்தை காண்பித்தா தினமும்
நிலவுக்கு சோறூட்ட முடியும்....
பொழுதுகளில் வெட்கப்படுவாயோ?
குறுஞ்செய்தி அனுப்பும் பொழுதுகளில்
வெட்கப்படுவாயோ?
உன் விரல் தட்டி,
எனை திட்டி அனுப்பிய
செய்தியானாலும் வெட்கம் என்
இதழ் தொற்றி பறிக்கிறதே...
வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்
சொல்வித்தை கற்று கொண்டேன்
வில்வித்தை கற்ற உன் புருவங்களிடமிருந்து
நல்வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்...
என்ன?
நெல் விதைத்து முத்தை
அறுவடை செய்ய இயலாததை போல...
என்னால் நீ தந்த சொல்லை
விதைத்து கவிதைகளைதான்
அறுவடை செய்ய முடிகிறது
இதழ்களை ஈரப்படுத்திக் கொள்கிறேன்..
இதழ்களை ஈரப்படுத்திக் கொள்கிறேன்..
என்னை நோக்கி நீ வீசும்
காதலால் காய்ந்த சொற்களை
என் இதழால் பற்றிக் கொள்ள....
என்னை நோக்கி நீ வீசும்
காதலால் காய்ந்த சொற்களை
என் இதழால் பற்றிக் கொள்ள....
Subscribe to:
Posts (Atom)