பள்ளிக்கு செல்லும் நீ, உன் தாயிடம்
உரக்க சொல்லி போகிறாய்,
நானும் அறியட்டும் என்று!?
போகும் பொழுது
உன் நிழலெடுத்து,
நினைவை விட்டு செல்கிறாய்.
உறக்கம் கெடுத்து,
கனவை கொடுத்து செல்கிறாய்.
ஒன்று கனவை கொடு, அல்லது உறக்கம் கொடு
இரண்டும் சேர்ந்தே செய்தால் யார் விழியில்
சென்று நீ தந்த கனவை காண்பேன் நீயே சொல்