என் எழுத்து அழகாக இருக்காது,
நீ பார்த்தால் கிண்டலடிப்பாய் என்று
அழகாக சலித்து கொண்டாய்,
(சலித்து கொள்வதிலும் உன் அழகு
எப்படிதான் தெறித்து விழுகிறதோ!!!!!)
எழுத கற்றுக் கொள்ளும்
குழந்தையின் கிறுக்கல்கள் என்றுமே
அழகுதானே, தாய்க்கு !!!!!
அதுபோல, உன் எழுத்தைவிடு
நீ வைக்கும் புள்ளிகூட,
கோலமிட்ட்தை போல் என்றும்
கொள்ளை அழகுதான் , எனக்கு!