தொடுதல் என்பது புலனால்
மட்டுமே வாய்ப்பது என்று
நினைத்திருந்தேன்,
உன் நினைவால் கூட வாய்க்கும்
என்று இன்றுணர்ந்தேன்,
என் தொடுதல் உன்னை
கூச்சப்படுத்தியதாய் கூறி,
உன் கூச்சத்தின் மிச்சத்தை என்னிடம்
விட்டு சென்றாயோ, என்னவோ?
உன் கூச்சம் நேற்று என்னை
தீண்டாமல் இன்று தீண்டுகிறது,
காற்றின் தொடுதல் கூட