பணிகளின் நடுவே
மறந்துவிட்டதாய் கருதாதே?
இரவில் சுவரொட்டி ஒட்ட
தெருவில் இறங்கி நடக்கும்
பொழுதுகூட என் மேல் விழும்
ஒவ்வொரு பனித்துளியும்
உன் அணைப்பின் கதகதப்பை
நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
ஊருக்குத்தான் நான் சமூகப்போராளி
ஆனால், என் காதலி நீதானடி
என் உள்ளத்தை உளவு பார்க்கும்
உளவாளி...