உன் தோளில் கை வைக்கும் பொழுது
சில நேரங்களில் கைநீக்கி விடுகிறாய்,
உன்னை தொட வரும் தென்றலிடம்
என்னவனை தவிர யாருக்கும் தொட
உரிமையில்லை, நீ என்னை நெருங்கும்
முன் என்னவனின் கைகள் காற்று புகா
அளவுக்கு என்னை அணைத்து கொள்வான் பார்
என்று சொல்வது போல் இருந்தது.