உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ என் உள்ளத்தில் குடிபுகுந்து
உரக்க குரல் கொடுக்க
தொடங்கியவுடன், உன் குரல் கேட்கும்
ஆர்வத்தில் என் இதயம் துடிக்க
மறந்து விட்டது...
ஆனால், உன் குரலதிர்வால்
இரத்தம் சீராகத்தான் இன்னும்
ஓடிக் கொண்டிருக்கிறது உடலில்...
Post a Comment