பிறந்த நாள், பரிசாக உனக்கு
ஏதும் அளிக்க வில்லை,
ஆனால்,என் பிறந்த நாள்
பரிசாக எனக்கு பின்பு பிறந்து,
என் வீட்டின் முன்பாகவே குடியமர்ந்திருக்கும்
உன் காதலை என்னவென்று சொல்ல?
என் காதலையெல்லாம் கொட்டி
தீர்த்து விட வேண்டும் என்றுதான்
உன்னிடம் நெருங்குகிறேன், ஆனால்,
என் காதல் தீர்ந்து விடக்கூடாது
என்பதில் எச்சரிக்கையாய் இருந்து
உன் காதலையும், முத்தத்தையும் மட்டும்
பறித்து வீடு திரும்பிவிடுகிறேன்.
இதில்,என் காதலை என்னவென்று சொல்ல?